வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்




னிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

Tamil - Suraikai
English - Bottle gourd

Sanskrit - Tumbini

Telugu - Sorakaya

Malayalam - Titalauki

Botanical name - Lagenaria siceraria


வாதபித்தம் வாயருசி வன்பீரி கஞ்சீதம்


ஓதிருத்து நோயுமுண்டாம் உள்ளனல்போம்-ஓதத்

திருப்பாற் கடற்றிருவே தீக்குணத்தை மேவுஞ்
சுரக்காயைத் தின்பவர்க்குச் சொல்

-அகத்தியர் குணவாகடம்

பொருள் - உடல் சூடு தணியும், சிறுநீர் நன்கு வெளியேறும், குளிர்ச்சியுண்டாக்கும், உடலுக்கு உரத்தைக் கொடுத்து பித்தத்தைச் சமப்படுத்தும்.

உடல் சூடு நீங்க

இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.

சிறுநீர் பெருக

மனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.

பித்தத்தைக் குறைக்க

உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.

சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.

· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

· உடலை வலுப்படுத்தும்.

· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.

· இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

· குடல் புண்ணை ஆற்றும்.

· மலச்சிக்கலைப் போக்கும்

· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.

சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.

சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.

ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.

அல்சரைப் போக்கும் அன்னாசி

 


ழங்கள் இயற்கையின் அருட்கொடைகள். இவற்றில் எண்ணிடலங்கா சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆரோக்கியம் நல்கும் பல பழங்களில் அன்னாசிப்பழமும் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம் இது. இனிப்புச் சுவையும், சற்றே புளிப்புச் சுவையும் கலந்த இதன் ருசி அலாதியானது.

100 கிராம் அன்னாசிப்பழத்தில் உள்ள சத்துக்கள்

சக்தி - 202 கலோரி
கார்போஹைட்ரேட் - 12.63ஞg
சர்க்கரை - 9.26 g
நார்ச்சத்து - 1.4 g
கொழுப்பு - 0.12 g
புரோட்டின் - 0.54g
தயமின் - 0.079 mg (6%)
ரிபோபுளோவின் - 0.631 mg
நியாசின் - 0.489 mg
பான்தோனிக் அமிலம் - 0.205 mg
வைட்டமின் பி6 - 0.110 mg
வைட்டமின் சி - 36.2 mg
கால்சியம் - 13 mg
இரும்பு - 0.28 mg
மக்னீசியம் - 12 mg
மாங்கனீசு - 0.28 mg

ப்ரோம்லின் (Bromelain)

அன்னாசிப் பழத்திலுள்ள ப்ரோம்லின் என்ற என்சைம்தான் அதனுடைய மருத்துவப் பயனுகளுக்கு காரணமாக அமைகிறது. இது நம் உடலில் பலவிதங்களில் செயல்படுகிறது. ஒன்று செரிமானத்திற்கு, இரண்டாவது காயங்களை ஆற்றுவதற்கு.

மாங்கனிசு (Manganese)

அன்னாசியில் அதிகளவு மாங்கனிசு சத்து உள்ளது. இது எலும்புகளின் சீரான வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. மேலும் புண்களை விரைவில் குணமாக்கும். நன்கு ஆரோக்கியமாக வைக்க உதவும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதனால் எந்த நோயும் விரைவில் அணுகாதவாறு பாதுகாக்கும்.

வைட்டமின் சி (Vitamine C)

இந்தச் சத்து அன்னாசியில் அதிகம் நிறைந்துள்ளது. இது திசுக்கள் நம் உடலில் விரைவில் வளர்வதற்கு உதவுகிறது. எலும்புகளில் உள்ள கொலஜன் ((Collagen)என்ற பொருள் உருவாவதற்குத் தேவையானது. சாதாரண இருமல், சளி போன்றவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கக் கூடியது. மேற்கூறிய பொருட்கள் அன்னாசியில் அதிகளவில் உள்ளதால் அதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

காயங்களை விரைவில் ஆற்ற

காயங்களையும், ரத்தக் கட்டுகளையும் உடைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. மேலும், தொண்டையில் ஏற்படும் ரணங்களையும் ஆற்றும் தன்மை அன்னாசிக்கு உள்ளது என்பதை ஹவாய் தீவு மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களுக்கு சிறந்த பலம் தரும் பழம் அன்னாசி. காரணம், மல்யுத்தத்தில் முகத்திற்கு அருகே கண் ஓரத்தில் குத்துப்படும் காயங்களை விரைவில் குணப்படுத்துமாம்.

கண்ணோய் வராமல் காக்க

வைட்டமின் பி1 (தையாமின்) மற்றும் மாங்கனிசு அன்னாசியில் அதிகம் இருப்பதால் கண்ணுக்கு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. வயதாவதினால் ஏற்படும் கண் சம்பந்தப்பட்ட வியாதிகளை இப்பழத்தை உண்பதால் தடுக்க முடியும்.

தைராய்டு சுரப்பி வீக்கம் அதாவது எணிடிtஞுணூ போன்ற நோய் வராமல் அன்னாசிப்பழம் நம்மைப் பாதுகாக்கும்.

அஜீரணக் கோளாறு நீங்க

சிலருக்கு நாட்பட்ட அஜீரணம், ஏப்பம், சாப்பிட்டவுடன் வயிறு மேலெழும்பி வலித்தல், விக்கல் போன்ற தொல்லைகள் இருக்கும். இவர்கள் அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிட்டால் இந்த தொல்லைகள் அனைத்தும் தீரும்.

சுவாசப் பையில் ஏற்படும் அழற்சி நோய் அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் குறைகிறது என்று தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அன்னாசியில் உள்ள கால்சியம், மாங்கனிசு, வைட்டமின் சி பொருட்களால் வயதானவர்களுக்கு ஏற்படும் எலும்பு பலம் இழப்பதைத் தடுக்க முடியும். எலும்புகள் வலுப்பெற உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க


வைட்டமின் சி மற்றும் “ஆன்டி ஆக்சிடண்ட்” அதிகளவில் அன்னாசியில் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சாதாரண இருமல், சளி போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

குடல் புழுக்கள் நீங்க


குடல் புழுக்களை அழிக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு. இதனால் அன்னாசி கிடைக்கும் காலங்களில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து வந்தால் குடல் புழுக்கள் அழிந்து பிள்ளைகள் நன்கு பசியெடுத்து சாப்பிட முடியும். மேலும், உண்ட உணவின் சத்துக்களும் தங்குதடையின்றி உடலில் சேரும்.

மலச்சிக்கல் நீங்க


உடலில் தோன்றும் வியாதிகளுக்கு முழுமுதற் காரணமான மலச்சிக்கல் அன்னாசி சாப்பிட்டால் உடனே நீங்கும்.


நோயில்லாத வாழ்வு வாழ அன்னாசிப் பழத்தை உண்டு அதன் பலன் முழுவதையும் அனுபவிப்போம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய்



கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய் தாக்கம் பல காரணங்களால் வருகிறது. அதில் உணவு பழக்க வழக்கத்தாலும் மனக் கவலையாலும் உண்டாகும் பாதிப்புகளை சென்ற இதழில் கண்டோம். பிற காரணங்களால் ஏற்படும் மஞ்சள் காமாலை என்ன என்று பார்ப்போம்.

கர்ப்பமுற்றிருக்கும்போது தாய்க்கு காமாலை வருவது என்பது மிக அரிதாக நடக்கக் கூடியதாயிருந்தாலும் அதனுடைய விளைவுகள் மிகவும் கடுமையானதாக தாய்க்கும் சேய்க்கும் அமைகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படும் மஞ்சள் காமாலை மிகவும் மோசமான விளைவுகளை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்துகிறது. Hepatitis GB என்னும் வைரஸ் கிருமியால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. Hepatitis A, B,C,D & E என்று பல வகைகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் 0.1 சதவீதம் கர்ப்பிணிப் பெண்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப் படுகிறார்கள். வளரும் நாடான நம் நாட்டில் 3-20 சதவீதம் வரை மஞ்சள் காமாலை நோயால் கர்ப்பமுற்ற பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் Hepatitis E வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களில் 10--20 சதவீதம் பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது, எவ்வாறு கர்ப்பிணிப் பெண்களை நோய்க் கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும், மேலும் நோய் தாக்குதல் வந்தால் எவ்வளவு விரைந்து செயல்பட்டு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே.

முதலில் நோய் தாக்குதலுக்கு உள்ளான கர்ப்பிணியை சுகாதாரமான சூழலில், தனிமையில் இருக்கச் செய்ய வேண்டும். இது மற்றவர்களுக்கு இந்த நோய் தொற்றாமல் தடுத்துவிடும்.

அவர்களுக்கு சரியான அளவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய அளவில் உணவுகளைக் கொடுத்து பராமரிக்கவேண்டும்.

அந்தந்த வைரஸ் கிருமி தாக்குதலுக்கு தக்க தடுப்பூசி (vaccine) மற்றும் இம்முனோகுளோபுலின் (Immuneglobulin) கொடுக்கப்பட வேண்டும்.

தாய்மார்கள் கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாத கால கர்ப்ப காலத்தில் Hepatitis B வைரஸ் ரத்தத்தில் உள்ளதா என்று அறியப்பட வேண்டும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு US Hepatitis B Immunoglobulin பிரசவம் ஆனவுடன் போடப்படவேண்டும். Hepatitis B தடுப்பூசி பிரசவம் ஆன 1 வார காலத்தில் ஒன்றும், மீண்டும் 1 மாத காலத்தில் ஒன்றும், பின் 6 மாத காலத்தில் ஒன்றும் கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கப்பட்டால்தான் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

தாயிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று குழந்தைக்கு முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் மிகவும் அரிதாகவும், இரண்டாவது மூன்று மாத கர்ப்ப காலத்தில் 6 சதவீதமாகவும், கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்தில் 67 சதவீதமாகவும் தொற்றிக் கொள்கிறது.

இந்த வைரஸ் தொற்று இல்லாமல் சில சமயம் கர்ப்பிணி பெண்களிடம் மஞ்சள் காமாலை தென்படும். அதற்குக் காரணம் பித்தப்பையில் கற்கள் உருவாகுதல் ஆகும். இந்த கற்கள் ஓரளவிற்கு மேல் பெரிய அளவில் உருவாகும்போது பித்தப்பை வாயை அடைத்துவிடுவதால் மஞ்சள் காமாலை ரத்தத்தில் தென்படும். இதனோடு வலதுபக்க வயிற்றுப் பகுதியில் தாங்கமுடியாத வலியும் இருக்கும். இப்படிப்பட்ட சமயங்களில் ஒருசில நேரம் அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்ற வேண்டிவரும்.

கர்ப்பிணிப் பெள்களுக்கு 5-6 மாத காலத்தில் உடலில் எல்லா இடங்களிலும் அரிப்பும் அதனோடு ரத்தத்தில் பித்த நீர் அளவு ( (Bile Acid) அதிகரிக்கும். அரிப்புடன் சில நேரம் ரத்தத்தில் Hepatitis அளவும் அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை என்ன காரணம் கொண்டு ஏற்படுகிறது என்பதை பலவித சோதனைகள் மூலம் கண்டறிந்து அதற்கு தக்க மருத்துவம் செய்வது நன்று. ஆனால் பொதுவான சில உணவு முறைகளை மஞ்சள் காமாலை கண்ட தாய்மார்கள் பின்பற்ற வேண்டும்.

வருமுன் காப்பது நல்லது. அதனால் கர்ப்பம் தரிக்கும் முன்னாகவே ஏஞுணீச்tடிtடிண் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெய், நெய், எண்ணெய் பொருட்கள் நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது.

மிகுந்த காரமான உணவு, ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

காபி, டீ மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் முறையான Antenatal Check up செய்து தன்னையும் குழந்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

பெண்களை பாதிக்கும் மெனோபாஸ்..

 

ரு பெண்ணுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்கள் ஏராளம். மாதச் சுழற்சி நிற்கும் இந்த காலத்தை மெனோபாஸ் என்று பெயரிட்டு அழைக்கிறோம்.

வேதம் பெண்ணை அக்னியின் சொரூபமாகவே பார்க்கிறது. ஏனெனில், oestrogen என்ற பெண் ஹார்மோன் அக்னிக்கு சமமான துல்லியமான குணங்களை உடையது. இதே போல் Testosterone என்ற ஆண் ஹார்மோன் ‘÷-ஸாமம்’ என்ற குணம் கொண்டது. இந்த oestrogen சினைப்பை (ovary)-ல் உற்பத்தி ஆகிறது. பெண்கள் பூப்படையும் 10-12 வயதுக்கு இது நன்கு சுரக்க ஆரம்பித்து அதனுடைய வேலையை தவறாமல் மாத மாதம் செய்வதால்தான் அவள் சரியான மாதவிடாய் சுழற்சியை பெற முடிகிறது. பின் 45-50 வயது ஆகும்போது சினை முட்டைகளின் செயல்பாடு குறைவதால், அதனுடைய சுரப்புத் தன்மை குறைகிறது. அந்த நேரத்தில் மாதவிடாய் சுழற்சி தடைபட ஆரம்பிக்கிறது.

இந்த காலம் பெண்களின் முக்கியமான காலமாக கருதப்படுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வுதான் என்றாலும் இதனால் உடலளவிலும், மனதளவிலும் அவதிப்படும் பெண்கள் தற்போது ஏராளம்.

பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது கபம் மேலோங்கி இருக்கும். பருவ வயதில் பித்தம் மேலோங்கி இருக்கும். 40-45 வயதுக்குப் பிறகு உடலில் வாதத்தன்மை அதிகரிக்கும். பித்தத்தின் வயதிலிருந்து வாதத்தின் வயதுக்குச் செல்லும் காலமே, மாதவிடாய் நிற்கும் காலமாகிறது.
இந்த காலத்தில் உடல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஹாட்ஃப்ளாஸ்கள் (Hot splash) தானாக உடலின் ஒரு சில பகுதிகளில் உஷ்ண உணர்வு தென்படும். அதுவே மறைந்துவிடும். இது சாதாரணமாக ஒன்று முதல் ஐந்து வருடங்கள் வரை காணப்படலாம். இதற்கான முக்கியக் காணம் ஹார்மோன்களின் ஏற்றத் தாழ்வுகளும் ரத்த நாளங்கள் விரிவடைவதும் தான்.

ஒரு சிலருக்கு அதிகமான வியர்வை ஏற்படலாம். இரவு நேரங்களில் அதிகமாக வியர்த்துக் கொட்டுவதால் உறக்கம் பாதிக்கப் படலாம். தலை சுற்றல், கை கால்கள் மரத்துப் போதல், இருதயப் படபடப்பு, உடல் எடை கூடுதல், பெண் உறுப்பில் வறட்சித்தன்மை, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் போன்ற பல இடர்பாடுகள் ஏற்படலாம்.

ஒரு சிலருக்கு இந்த இடர்பாடுகள் ஏற்படாமலும் இருக்கலாம்.

கவனிக்க வேண்டிய இடர்பாடுகள் சில


· இருமும்போதும் தும்மும்போதும் சிறுநீர் கசிதல் (Stress incontinence)


· எலும்புத் தேய்மானம் (Osteoporosis) உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவதால் எலும்பின் கெட்டித்தன்மை குறைந்து பலம் குறையும். அதனால் மூட்டுகளில் வலி கால் எலும்புகளில் வலி போன்றவை ஏற்படும்.


· ஈஸ்ட்ரோஜன் உடலில் நன்கு வேலை செய்யும் காலத்தில் உடலில் கொழுப்புச் சத்து சேர விடாது. அதனுடைய அளவு குறையும் காலத்தில் உடலில் கொழுப்பு சேர ஆரம்பிக்கும். இதனால் உடல் எடை கூடும். மேலும், இருதய சம்பந்தமான நோய்கள் எளிதாக தாக்கக்கூடும்.


· மன சஞ்சலங்கள் அதிகமாக இருக்கும். மன அழுத்தம், சோகம், மன பரபரப்பு, எரிச்சல், அசதி போன்ற இடர்பாடுகள் அதிகமாக தென்படும்.


இந்த இடர்பாடுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியுமா?


முடியும்.. எப்படி?


சில வாழ்வியல் மாற்றங்களை மெனோபாஸ் காலத்தில் மேற்கொள்வதன் மூலம் இத்தகைய தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

உணவு முறை


· மிக எளிதாக சீரணிக்கத்தக்க உணவுகளை நேரம் தவறாமல் உண்ணுதல் வேண்டும்.


· எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களை அறவே தவிர்த்தல் வேண்டும்.


· மசாலா நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.


· நீண்ட பட்டினி, உபவாசம் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.


· காலையில் சரியான நேரத்தில் சிற்றுண்டி, மதியம் காய்கள் கீரைகள் கலந்த அளவுடன் ஆன உணவு, இரவு அரை வயிறு மட்டுமே நிரம்பக்கூடிய எளிதில் சீரணமாகக்கூடிய உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.


· நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்த்துவிட வேண்டும்.


· காபி, டீ, அளவுடன் அருந்த வேண்டும்.



உடற்பயிற்சி


நடைபயிற்சி இதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் காலை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை நடைபயிற்சி செய்யலாம்.


நல்ல காற்றோட்டம் கிடைக்கக்கூடிய பூங்காக்களிலோ, அல்லது கடற்கரை சாலைகளிலோ நடைபயிற்சி செய்யலாம் .


யோகப் பயிற்சி மனசு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல நிவாரணம் அளிக்கிறது. தியானம், மனதில் ஏற்படும் தேவையில்லாத எண்ணங்களை வெளியேற்றுகிறது. இதனால் மனது லேசாகி, எதையும் தெளிவுடன் அணுக முடிகிறது. மேலும் இருதய சம்பந்தமான நோய்களிலிருந்தும் விடுபட வைக்கிறது.


மன அழுத்தத்தைக் குறைக்க மனதிற்கு இனிய இசைகளைக் கேட்கலாம்.


40 வயதில் இருந்து பெண்கள் இத்தகைய வாழ்வியல் மாற்றங்களை சரியான முறையில் கடைப்பிடித்தால் மெனோபாஸ் என்ற அந்த காலத்தை மிகச்சிரமங்களுடன் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. மிகவும் சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்ளலாம்.