சனி, 29 டிசம்பர், 2012

CD டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம் இதனை எப்படி சரி செய்வது?


கணினியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது CD/DVD டிரைவ் ஆகும்சில நேரங்களில் CD டிரைவில் CDயை போட்டு பார்த்தால் கணினியின் my computerல் CD டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது CD டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது?

  1. முதலில் Device Managerல் CD டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Devise Manager செல்ல desktopல்  உள்ள my computer ஐகானை வலது கிளிக் செய்து manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Devise Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணினியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் தெரியும். அதில் CD/DVD Rom devices என்பது enable ஆக உள்ளதா என பார்க்க வேண்டும்
  2. உங்கள் கணினியின் CPUவில் CD/DVD டிரைவை இணைக்கும் cable சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்
  3. மேற்கண்டவை சரியாக இருந்தும் கணினியில் CD டிரைவ் தெரியவில்லை என்றால் Registerல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன CD டிரைவை மீட்கலாம்.
  4. Start->Run சென்று regedit என்று type செய்து எண்டர் செய்யவும். இப்போது கணினியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள key கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் CD/DVD டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Class\{4D36E965-E325-11CE-BFC1-08002BE10318}  இந்த key கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkeyகள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணினியை  Restart செய்து விட்டு பார்க்கவும்.

இயற்கையான அழகு குறிப்புகள்



தற்காலத்தில் தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் பெண்களுக்கு அதிக
ஆர்வமும், போட்டியும் இருக்கிறது..

ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில்
நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

அவரவர் மனதில் அவரவர்களே கதாநாயகனாக, கதாநாயகியாக உருவகித்துக்கொண்டு
வாழ்ந்துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொதுவான எண்ணங்கள்தான்.

இருப்பினும் இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய
அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள்
இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை..

இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய
உடலழகைப் பேண முடியும்.

*இயற்கையான அழகு குறிப்புகள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். *

முதலில் நகம். நகத்தை தூய்மையாக வைத்துக்கொண்டாலே உடலில் பாதி நோய்கள்
அண்டாது. மருத்துவர்கள் கூட வைத்தியம் பார்த்தவுடன் அடிக்கடி கைக்களை சோப்பு
நீரில் கழுவுவதை நாம் பார்த்திருப்போம்.

காரணம் மனிதர்களுக்கு கிருமிகள் பெரும்பாலும் கைகளின் மூலமாகவே வாயிற்கும்,
வயிற்றும் சென்று பல உபாதைகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் கைகளை நன்றாக கழுவி
சுத்தம் செய்து பிறகே சாப்பிட வேண்டும் என்றும், அடிக்கடி நகத்தை கடிக்க
கூடாதென்றும் பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

*நகத்தைப் பராமரிக்க: *

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும்
குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு
கிடைக்கும்.

*இதழ்களை பராமரிக்க: *

நம் வீட்டில் பொரியலுக்கு வாங்கும் பீட்ருட் சிறிதளவு இருந்தாலே போதும்.
உங்களுக்கு எந்த வித Lipstick-ம் தேவையில்லை. பீட்ரூட்டை வெட்டி உங்கள்
இதழ்களில் இலாசக லிப்ஸ்டிக் பூசுவதைப் போல அழுத்தி தேய்த்து வந்தாலே போதும்.
உங்களுக்கு இயற்கை கொவ்வைச் செவ்வாய் இதழ்கள் கிடைக்கும்.

பலரையும் கவர்ந்திழுக்கும் இயற்கையான செந்நெறி உதடுகளைப் பெறலாம்.

கூடவே இந்தப் பதிவில் இருப்பதைப் போலவும் நீங்கள் செய்து பார்க்கலாம்.
ரோஜாப்பூ போன்ற இதழ்களைப் பெற வேண்டுமா?

*முகத்தைப் பராமரிக்க: *

உங்களுக்கு அமுல்பேபி போன்ற கொழுக் மொழுக் முகத்தைப் பெற வேண்டுமா? நீங்கள்
செய்வதென்னவோ சுலபமான வேலைதான்.

நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள்
முகத்தை கழுவிப் பாருங்கள்.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில்
பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

இந்த இரண்டு முறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்கள் முகம் "பளிச் பளிச்"
போங்க..!

*கழுத்தை பராமரிக்க: *

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க
தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து
கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு,
இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். ஒரு
பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ்
செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை
நிறம் நீங்கி பள பளக்கும்.

*சருமத்தைப் பராமரிக்க: *

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள்.
அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை
அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட
சருமத்தில் நிறம் சிவப்பாக காட்யளிக்கும்.

*கருவளையம் நீங்க: *

கருவளையம் என்றாலே கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையத்தைத்தான் குறிக்கும்.
கருவளையம் நீங்க இதுதான் சிறந்த வழி. வெள்ளரிக்காய் விடையை பொடி செய்து, அதில்
தயிர் சேர்த்து பசைப்போல(Paste)ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை கருவளையும் உள்ள
பகுதியில் தொடர்ந்து பூசி வர முப்பது நாளில் கருவளையும் இருந்த இடம் காணாமல்
போயிருக்கும்.

*கருப்பு திட்டுகளை நீக்க: *

சிலருக்கு முகத்தில், மூக்கில், கண்ணங்கள் என அசிங்கமாக கருப்பு நிற திட்டுகள்
காணப்படும். இதை கிராம புறத்தில் "மங்கு" என குறிப்பிடுவார்கள். இவற்றைப்
போக்க, ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து ஆகியவற்றை நீர்கலந்து நன்றாக
அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த பற்றை முகத்தில் இருக்கும் கருப்பு திட்டுகள்
இருக்கும் இடத்தில் பசைப்போல தடவுங்கள். சில முறை இந்த முறையை நீங்கள்
கையாண்டால் போதும் முகத்தில் உள்ள அசிங்கமான மங்கு(கருந்திட்டு)மறைந்துவிடும்.

*Nature cleanser (இயற்கை கிளென்சர்)*

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் ஒரு நல்ல cleanser ஆகும். குளிர்ந்த பாலில்
பஞ்சை நனைத்து முகம் துடைக்கலாம். இது ஒரு சிறந்த க்ளென்சிங் ஆகும்.

இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங்காய்
உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடையவர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால்
சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சினை நனைத்து சருமத்தை துடைக்காலம்.

வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுடன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

*முகப்பரு போக்க: *

முகத்தை, முகத்தின் அழகை கெடுப்பதில் முகப்பருவிற்கு பெரும்பங்கு உண்டு. பரு
வந்து காய்ந்து போனால் முகத்தில் திட்டு திட்டாக, கருமை நிறத்துடன் முகம்
பொலிவிழந்து காணப்படும். எனவே முகத்தில் பரு வராமல் பார்த்துக்கொள்வது நல்லது.
முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப்பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர
முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூன் பயிற்ற மாவைக் கலந்து முகப்பரு
தழும்புகளின் மீது பூசிவர முகப்பரு தழும்புகள் நீங்கும்.

*முகம் பொலிவு பெற ஒரு Hi-tech இயற்கை மருத்துவ முறை: *

பாதாம் பருப்பு. பெயரிலேயே இது ஒரு அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்த பாதாம் பருப்பை
ஊறவைத்து  பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்தெடுங்கள். பேஸ்ட்போல
ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசுங்கள். 20-25 நிமிடங்கள்
கழித்து முகத்தைக் கழுவிப் பாருங்கள்.. நீங்களே வித்தியாசத்தை உணர்வீர்கள்...

முகம் பளிச் பளிச்தான் போங்க...!!

*மற்றொரு இயற்கையான எளிய முறை:*

கடலை மாவு.. இது நம் வீட்டிலேயே அடிக்கடி பயன்படக்கூடியது இல்லையா...?
காலையில் குளிக்கப் போகும் முன் இதை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் குழநைத்து
முகத்தில் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித்துவிடுங்கள். தொடர்ந்து
இரண்டு வாரங்கள் இந்த முறையைப் பின்பற்றினாலே உங்கள் முகம் பளபளக்க
ஆரம்பித்துவிடும். விரைவான பலனைக் கொடுப்பதில் கடலைமாவு முன்னணி வகிக்கிறது.

*முகச்சுருக்கம் போக்க: *

ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த
பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது
முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள்.
 காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த
புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற
மாவு)5 கிராம்.

இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து
நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை
கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில்
சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

*மற்றொரு முறை: *வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும்,
சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு
அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு
முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள்
முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள்
செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.


மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி
செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப்
பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு
வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்..
நீங்களும் உலக அழகிதான்...!!! உலக அழகன்கள்தான்...!!!

புதன், 26 டிசம்பர், 2012

தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க




இப்ப வேலை பார்க்கிற எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை-லஒன்னு தான் தூக்கமின்மை. சில ருக்கு வேலைப் பளு, ஆரோக்கிய மில்லா லைப் ஸ்டைல்-னால தூக் கம் வரமாட்டிங்குது. அதனால சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுறா ங்க. தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிடுறதால உடம்புக்குத் தான் கேடு வரும். அப் படி மருத்துவர் ஆலோசனை இல் லாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டா என்னென்ன ப்ராப்ளம் வருதுன்னு பாக்கலாமா!!!

1. தூக்க மாத்திரை ஒரு போதைப் பொருள் மாதிரி, அதை அடிக்கடிசாப்பிட்டா நாம அதுக்கு அடி மை ஆகிவிடுவோம். அப்புறம் நமக்கு நார்மலா தூக்கம் வந்தா கூட தூக்க மாத்திரை போடாம, நிம்மதியா தூங்க முடியாது, தூக்கமும் வராது.

2. தூக்க மாத்திரை சாப்பிட்டா நாம சுவாசிப்பதில் பிரச்சனை வரும். மேலும் ஆஸ்துமா, சுவா சக் கோளாறு பிரச்சனை இருக் குறவங்க தூக்க மாத்திரை சாப்பிட வேண்டாம்.

3. சிலர் தூக்க மாத்திரையை ஜூஸ் அல்லது ஆல்கஹாலில் கலந்துசாப்பிடுவாங்க. அப்படி சாப் பிட்டா உடலுக்கு மிகவும் ஆபத்தானது. மேலும் ஆல்க ஹாலில் கலந்து சாப்பிட்டா ல், சில சமயங்களில் மரண ம் கூட ஏற்படலாம். முக்கிய மாக தூக்க மாத்திரையை திராட்சை பழ ஜூஸ் கூட சாப்பிட வேண்டாம்.

4. தூக்க மாத்திரை சாப்பிட்டா அடிக்கடி காலையில் தலைவலி, மயக்கம், சோர்வு, அதிக தாகம் போன் றவை ஏற்படும்.

5. தூக்கம் அதிகம் வருவதால், பசி யைக் கூட மறந்து விடுவோம். இத னால் உடலில் உள்ள சக்தி குறை ந்து, தலைச் சுற்றல், உடலில் நடு க்கம் போன்றவை ஏற்படும்.

ஆகவே தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க.

சத்தான நெல்லிக்காய் ஊறுகாய்



  

நெல்லிக்காய் வைட்டமின் C, அதோடு வைட்டமின் D, வைட்டமின் E நிறைந்தது. இதில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. இதனை ஏதாவது ஒரு வகையில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே வெயில் காலத்தில் நெல்லிக்காய் ஊறுகாய் செய்து சாப்பிடலாம். சத்தாகவும் சுவையாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய்அரை கிலோ
வரமிளகாய் : 30 கிராம்
உப்புஒரு கை பிடி அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணய் – 150 மிலி
பெருங்காயத்தூள் – 1 டீ ஸ்பூன்
வெந்தையம் – 2 டீ ஸ்பூன்
கடுகு - 3 டீ ஸ்பூன்

ஊறுகாய் செய்முறை


நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் கொதிக்கிற வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து நீரை வடிக்கவும்.

உப்பு, வர மிளகாயை காயவைத்து பொடி செய்து நெல்லிக்காயில் சேர்த்துக் கலக்கவும்.

நல்லெண்ணையில் கடுகு, வெந்தையம் பெருங்காயம் தாளித்துக் கொட்டி, நன்றாக கலந்து, காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்துவைக்கவும்.

கிலோ கணக்கில் நெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கும்போது நறுக்கிய காயின் அளவு எட்டுக்கு ஒன்று என்ற அளவில் மிளகாய்த் தூளும், உப்பும், காரத்தின் அளவுக்கு முக்கால் பாகம் அல்லது அதற்கு மேலும்கூட எண்ணெயும் தேவை. நெல்லிக்காயின் புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கவும்.

அசெம்பிள் கம்ப்யூட்டர், பிராண்டெட் கம்ப்யூட்டர் என்ன வித்தியாசம்?

கம்ப்யூட்டரில் இரண்டு வகை உண்டு.


1. பிரபல நிறுவனங்கள் தயாரித்து விற்கும் கம்ப்யூட்டர்கள்..(Branded computers)
2. நாமாக கணினியின் பாகங்களை வாங்கி, அவற்றை ஒன்றிணைத்து கணினியாக மாற்றுவது. (Assemble Computer)

முன்னது பிராண்டட் கம்ப்யூட்டர் எனவும், பின்னது அசெம்பிள் கம்ப்யூட்டர் எனவும் அழைக்கிறோம்.
சரி.. இவை இரண்டனுக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன? இரண்டும் ஒன்றா? இல்லை வெவ்வேறானவை? இந்த குழப்பங்கள் ஒரு சிலருக்கு இருக்கக்கூடும்.

இரண்டும் செயல்படுவதில் ஒன்றுதான். ஆனால் கணினி தயாரிப்பு முறைகளில், அதில் இடம்பெற்றிருக்க பாகங்களின் தரங்களில் வேறுபடுகிறது.

அவற்றைப் பற்றி முழுமையாகப் பார்ப்போம். முதலில் பிராண்டட் கம்ப்யூட்டர்களை (Branded Computers)எடுத்துக்கொள்வோம். இது மிகப் பிரபலமான நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு, ஒரு சில சோதனைகளுக்குப் பிறகு விற்பனைக்கு விடப்படுகின்றன.


பிராண்டட் நிறுவனங்கள் எவை?
(What are the branded companies?)
Dell, Asus,HP, Lenovo, Sony, Toshiba, Compaq,Gatway, packard bell, acer, amd, ati, vaio, nec, ibm, apple, nvdia, போன்ற நிறுவனங்களை கூறலாம் இதைத் தவிர்த்து இன்னும் கூடுதலாக ஒரு சில நிறுவனங்களும் இருக்கின்றன.

இத்தகை நிறுவனங்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்கள் நல்ல சிறப்பானதொரு கணினி பாகங்கள் உள்ளடக்கியதாகவே வெளிவருகிறது. இன்றைய காலத்தில் போட்டி மனப்பான்மையால் வாடிக்கையாளர்களைக் கவர, இந் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு, அதிக வசதிகளையும், மேம்படுத்தல்களையும் செய்து தருகிறது.

இத்தகைய நிறுவனங்களின் கணினிகளையே பிராண்டட் கம்ப்யூட்டர் என்று அழைக்கிறோம்.

பிராண்டட் கம்ப்யூட்டரில் உள்ள நன்மைகள்:
(The advantages of branded computer:)
பிராண்டட் கம்ப்யூட்டர்கள் வாங்குவதால் அதற்குத் தேவையான அனைத்துப் பாகங்களும் அதிலேயே உள்ளடக்கி கொடுக்கிறார்கள். எனவே வெளியில் ஏதேனும் பாகங்கள் வாங்கத் தேவையில்லை. பிராண்டட் கம்ப்யூட்டர்களுக்கென தனியாக எந்த ஒரு மென்பொருளும் வாங்கத் தேவையில்லை. குறிப்பாக OS என்று சுருக்கமாக அழைக்கப்படுகிற Operating System (Windows 7, Windows vista Windows xp)இவற்றை பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை. கணினியிலேயே அனைத்து மென்பொருள்களும் இணைந்து கிடைப்பதால் வாங்கிய உடனேயே கணினியைப் பயன்படுத்த முடியும்.

பிராண்டட் கணினிகளில் original mother board பொருத்தப்பட்டிருக்கும். மேலும் இவை சிறப்பாக செயல்படவென அவற்றிற்கான சிறப்பு இயக்க முறைமைகளை சிறப்பு மென்பொருளைப் பயன்படித்தி உருவாக்கப் பட்டிருக்கும். BIOS UPDATION, DRIVER UPDATION போன்ற பல அப்டேசன்களைச் செய்து mohter board சிறப்பாக செயல்படும்படி அமைக்கப்பட்டிருக்கும்.

SMPS என்று சொல்லக்கூடிய Switched mode power supply யானது பிராண்டட் கம்ப்யூட்டரில் இருக்கும் Hardware-களுக்கென சிறப்பாக தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருக்கும். இந்த SMPS ஆனது கணினியில் உள்ள Mother board, Prossor, hard disk, DVD Player என ஒவ்வொரு பாகத்திற்கும் மின்சாரத்தை மிகச் சரியாக பிரித்து கொடுக்கும் பணியைச் செய்கிறது. இதனால் பிராண்டட் கம்ப்யூட்டரில் உள்ள உள் பாகங்கள் சரியாக இயங்குவதோடு, எளிதில் பாகங்கள் செயலிழக்காமலும் பாதுகாக்கப்படுகிறது.

பிராண்டட் கம்ப்யூட்டரில் இருக்கும் ஹார்ட்வேர் பகுதிகள் பல சோதனைகளுக்குப் பிறகு இணைக்கப்படுவதால் மிகவும் தரமானதாக இருக்கும். எனவே கணினியைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட துணிந்து பிராண்டட் கம்ப்யூட்டர்களை வாங்கலாம்.

பிராண்டட் கம்ப்யூட்டர்களை வாங்குவதால் இன்னும் கூடுதல் வசதிகளைப் பெற முடியும். ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென பிரத்யேகமாக இணையதளங்களைக் கொண்டிருக்கிறது. அந்த இணையதளங்களின் மூலம் அந்த கணினிகளுக்குரிய (Computer Model)hard Drive களுக்கேற்ற Update களைப் பெற முடியும். இது ஒரு கூடுதலான பயனுள்ள வசதியாகும்.

Dell கணினிகளை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த நிறுவனத்திற்குரிய இணையதளமான www.dell.com சென்று உங்கள் கணினிக்குத் தேவையான மேம்படுத்தல்களை செய்ய முடியும் (Driver Updates).

பிராண்டட் கணினிகள் வாங்குவதால் இத்தகைய நன்மைகள் நமக்கு இருக்கின்றன.


 
அசெம்பிள் கம்ப்யூட்டரில் உள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
(What are the advantages of assembly of the computer? What is evil?)
நான் வைத்திருப்பது அசெம்பிள் கம்ப்யூட்டர் தான்.. Hardware Engineer ஆன எனது நண்பர்கள் எனக்கு பல்வேறு பாகங்களை வாங்கி, ஒரு அருமையான கணினியை உருவாக்கித் தந்தார்

ஒவ்வொரு பாகமாக நன்கு கேட்டறிந்து, தனது அனுபவத்தில் அதிக வாழ்நாளைக் கொடுக்கக்கூடிய பாகங்களை வாங்கி எனக்கு அசெம்பிள் கம்ப்யூட்டர் செய்து கொடுத்தார். சுமார் 3 வருடங்களுக்கு மேலாக எந்த பிரச்னையுமின்றி கணினியானது செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

சரி.. கணினி அசெம்பிள் செய்ய முக்கியமாக என்னென்ன பாகங்கள் வேண்டும்?
(What should be important to the assembly of computer parts?)

முதலில் computer case என்று சொல்லக்கூடிய நல்ல கேபின் வாங்க வேண்டும்.
அதற்கடுத்து அதில் பொருத்துவதற்கு உண்டான அனைத்து ஹார்ட்வேர்களையும் வாங்க வேண்டும்.
குறிப்பாக நல்ல நிறுவனத்தினுடைய
  1. Mother Board.
  2. processor
  3. RAM (Random Access Memory)
  4. Hard Disk 
  5. DVD Drive
  6. IDE-SATA Cables
  7. Monitor
  8. VGA Cable
  9. Power Cable
  10. Mouse – Keyboard
  11. Speaker
  12. OS CD Original (windows 7, windows 8, windows xp, windows vista)இவற்றில் ஏதாவது ஒரு Operation System மென்பொருள்.(os cd ரொம்ப முக்கியம்)
  13. Head Set (தேவைப்படின்)
இவற்றை அனைத்தையும் வாங்கி முறையாக ஒன்றிணைத்து ஒரு மணி நேரத்திலேயே கணினியை இயங்க வைக்கலாம். OS போடுவதற்கு சிறிது நேரம் எடுக்கும். எப்படியிருந்தும் இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் உங்கள் கணினியை உருவாக்கி அதில் நீங்கள் வேலை செய்ய முடியும்.

இவற்றிலுள்ள நன்மைகள்:
(Benefits of Branded Computer)
1. செலவு குறைவு.. பகுதிப் பொருட்களை நாமே வாங்குவதால் பார்த்து நல்லதாக தேர்ந்தெடுக்க முடியும்.

2. குறைந்த நேரத்தில் கணினியை இயக்கிப் பார்க்கும் வசதி.. கணினியில் ஏதேனும் பழுது என்றால் முடிந்த வரை நாமே அதைத் தீர்க்க முயற்சிக்கலாம்.

3. Ram, மற்றும் Fan ஆகியவற்றை தூய்மைப்படுத்துவது எளிதாக இருக்கும்.

4. ஏதேனும் பிரச்னை என்றால் துணிந்து அதில் கை வைக்கலாம். நம்மால் முடியாத சூழ்நிலை கணினி சரிசெய்பவரை அழைத்துக்கொள்ளலாம். பிராண்டட் கம்பெனி கம்ப்யூட்டர்களில் இவ்வாறு செய்ய முடியாது. காரணம் சர்வீஸ் சென்டர்களில் கொண்டுபோனால் இலவச சர்வீஸ் செய்யமாட்டார்கள். கணினியை திறக்காம் சீல் வைத்தப்படி அப்படியே இருந்தால் தான் இலவச சர்வீஸ் கிடைக்கும்.

5. ஏதாவது பழுது என்றால் உடனே மாற்றுப் பொருள் வாங்கி பொருத்தி செயல்படுத்தலாம். ஒரு கணினியிலுள்ள பொருளை எடுத்து இயங்காத கணினிக்குப் பொருத்தி சரிபார்த்துக்கொள்ளும் வசதி. உதாரணமாக SMPS போய்விட்டது என்றால் அதை கழற்றிவிட்டு வேறொரு SMPS - மாற்றி சோதனை செய்து பார்க்கலாம்.

6. மின்விசிறி இல்லாத இடத்தில் கூட வைத்து பயன்படுத்தலாம். கேபின் உள்ளே நல்ல காற்றோட்டமான இடைவெளி இருப்பதால் சூடேறுவது குறையும். இதனால் கணினியின் பாகங்கள் கெட்டுப்போக வாய்ப்புகள் குறைவு..

சராசரி பொருளாதார சூழ்நிலைகள் கொண்டவர்களுக்கு இந்த அசெம்பிள் கம்ப்யூட்டரே பொருத்தமானது.

கணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்!



 


ங்கள் கணணி, வந்தட்டுக்கள், யு.எஸ்.பிக்கள், நினைவு அட்டைகள் (மெமரிக்கார்ட்) போன்றவற்றில் ஏற்பட்ட வைரஸ்தாகுதல் அல்லது பழுதுகாரணமாக முழுத்தரவுகளும் அழிக்கப்பட்டுவிட்டனவா? அவற்றை மீட்டெடுக்க முடியவில்லையா?
அதற்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருளே இது!
இலகுவாகவும், காலவரையறைக்கமையவும் தரவுகளை மீட்டுத்தர இவ் மென்பொருள் துணை புரிகின்றது!
கணணியில் நிறுவிப்பயண்படுத்தவேண்டிய அவசியமில்லாததால், உங்கள் யு.எஸ்.பி சாதனங்களில் இவ் மென்பொருளை தரவிறக்கிவைத்துக்கொள்வதன் மூலம், தற்செயலாக அல்லது விபத்தாக அழியும் தரவுகளை மீட்கத்துணை புரியும்!

அளவு : 8 MB
தரவிறக்க Download now!