ஞாயிறு, 9 அக்டோபர், 2011

உடல் உறவின் பயன்கள்

 
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உள
 
கண்டு, கேட்டு, உண்டு, முகர்ந்து, தீண்டி அனுபவிக்கும் ஐம்புல இன்பங்களும் வளையல் அணிந்த இப்பெண்ணின் இடத்தே கொள்ளக் கிடக்கின்றன!
 
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.
 
ஆராய்ந்தறிந்த நல்ல ஆபரணங்களை யணிந்த இப்பெண்ணோடு சேர்ந்து வாழ்தல் என்பது, உயிர் உடலோடு சேர்ந்து இன்பத்தை நுகர்வதைப் போன்றது. இவளை பிரிந்து வாழ்தல் என்பது, உயிர் விட்டுப்போகச் சாதலைப் போலத் துன்பம் அனுபவிப்பது.
 
இல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
 
சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான “தூண்டுதல் சக்தி” எல்லாவித பாசிடிவ் செயல்கள், கிரியேடிவ் செயல்கள் இவையெல்லாமே செக்ஸ் உந்துதல் தான் என்கிறார் ஃப்ராய்டு.
 
உடலுறவின் நன்மைகள்
 
ரத்த அழற்சி சீராகி மூளைக்கு அதிக ரத்தம் பாய்கிறது.
 
கலவியின் போது பல ரசாயன மாற்றங்கள் உடலில் நிகழும். மூளையில் டோஃபாமைன் அளவுகள் ஏறும்.
 
உடலுறவு ஆஸ்த்மாவை கட்டுப்படுத்தும்.
 
மகிழ்ச்சியான உடலுறவில் பெண்களின் அழகு கூடுகிறது. ஏழு நாட்களில் 4 முறை உடலுறவு கொள்ளும் பெண்கள் 10 வருட வயது குறைந்தவர்களாக தெரிகின்றனர். இவை சமீபத்திய விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பவை.
 
உடல் உறவு என்பது அற்பநேர சந்தோஷத்திற்காகவோ அல்லது இனவிருத்திக்காகவோ மட்டுமல்ல அதையும் விட மகத்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சிகள் இதனை தெளிவுபடுத்தியுள்ளன. நீண்ட நேரம் உடலுறவு கொண்டு கருத்தரிக்கும் பெண்களுக்கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ள பெண்களுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகின்றன என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தவிர, பெண்கள் அதிக நேரம் உடலுறவு கொள்வதால் பெண் உறுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற்காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
 
உடல் உறவு என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழியாகவே கருதப்படுகின்றது. இதனையே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொள்வதால் மன இறுக்கம் குறைகின்றது. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்றது. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.
 
கணவன் – மனைவி இருவரும் சராசரியாக வாரம் இருமுறை உறவு வைத்துக் கொள்வது உடல் நலத்தை பெருக்கி உடல் ஆரோக்கியத்தை பேணிட உதவுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வாரம் இரு முறை குறைந்த பட்சம் உறவு வைத்துக் கொள்வது ஜலதோஷத்தை அண்டவிடாது தடுத்திடும் வயிற்றுப் பிரச்சனைகளான நெஞ்செரிச்சல், அல்சர் வலி போன்றவற்றையும் போக்கிடும்.
 
உடலுறவு என்பது பல விதமான உடல் மற்றும் மனரீதியான உபாதைகளுக்கு ஒரு வடிகால் போன்று விளங்கினாலும் அளவோடு வைத்துக் கொள்வது மட்டுமே சிறந்த பயனை தந்திடும். அளவுக்கு அதிகமான உடலுறவு சோர்வை கொடுத்து உடலை பலவீனமடையச் செய்து விடும். குறைந்த இடைவெளியில் வாரத்திற்கு இரண்டு முறைக்கு மிகாமல் உறவு கொள்வதே ஆரோக்கியத்தை பெருக்கிடும் என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு உறவு கொள்வது உடலில் இம்மியூளோகுளோபுலின் – ஏ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிடும் இராசயன் பொருளை உடல் தேவையான அளவு சுரந்திட வழி வகுக்கும். இதனால் உடல் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றிடும்.
நியுயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில் உடலுறவால் தலைவலி, கீல்வாதம் போன்ற பல வலிகள் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது. உடலுறவு கொள்ளும் பொழுது மூளையில் ஏற்படும் இயற்கையான சில இரசாயன சுரப்புகளால் சந்தோஷம் பெருகுவதால் இந்த இரசாயனப் பொருட்கள் வலி நிவாரணத்திற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
 
மேலும், இவ்வகைச் சுரப்புகள் மன அழுத்தத்தை போக்கி உடல் முழுவதும் ஒரு வித புத்துணர்ச்சியை பரவிடவும் செய்கின்றதாம்.
உடலுறவின் போது மூக்கும் அதிக சுறுசுறுப்பாகி தனது பணியை செவ்வனே செய்து அதிக சுரப்புகளை சுரந்தும் அதிக உமிழ்நீரைச் சுரக்கவும் செய்கின்றது. இதனால் தனது பணியை முறையாக மூக்குகள் செய்து மூக்கில் உள்ள நரம்புகள் வலுவடைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
திருப்தியான உடலுறவிற்குப் பின், உடல் களைத்துப் போய் சோர்வடைவது இயல்பே. இதற்கு அடிப்படைக் காரணமாக விளங்குவது உடலுறவின் போது, உச்சநிலையை அடைந்த பின்னர் உடல் ‘ஆக்கிடோஸிஸ்’ என்ற இரசாயனப் பொருளை சுரக்கின்றது.
 
இப்பொருள் ஓய்வையும் உடல் வெப்பத்தையும் மாற்றமடையச் செய்கின்றது. இப்பொருளே வாழ்க்கை துணைவருடன் அன்பை பெருக்கி இனிய மனநிலையை உண்டாக்குகின்றது.
 
பெண்களுக்கு உடலுறவு மாதவிலக்கு ஏற்படுத்தும் பலதரப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கின்றது. குறிப்பாக, மாதவிலக்கின் சமயம் “எஸ்ட்ரோஜனின்” அளவு சீர் செய்யப்படும் பொழுது, மாதவிலக்கிற்கு முன்பாக உடலுறவு கொண்டால் எஸ்ட்ரோஜனின் அளவு எளிமையாக சீரமைக்கப்படுகின்றது. அதனால் மாதவிலக்கின் போது ஏற்படும் பலவிதமான வலிகள் சோர்வு போன்ற உபாதைகள் பெரிதும் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
ஆண்களுக்கு உடல் உறவு களைப்பை, இறுக்கத்தை, மனச்சோர்வை போக்கிடும் ஒர் மாமருந்தாகும். மனம் அமைதி பெறவும் உடல் புத்துணர்ச்சி பெற பெரிதும் பயன்படும் அற்புத செயலாகும்.
 
உளவியல் மற்றும் மனஇயல் நிபுணர்களும் கூட பிரமச்சரியத்தை விட, உடலுறவால் தான் அதிக உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் தர இயலும் என ஒப்புக்கொள்ள ஆரம்பித்து, பரிந்துரையும் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
 
நமது கலாச்சாரத்தில் உடலுறவிற்கு கடைசியிடம் ஒதுக்கப்படலாம். ஆனால், ஆரோக்கியமாக வாழ்ந்திட உடல் உறவு ஒர் ஒப்பற்ற உன்னத வடிகாலாகும். எனவே, அவரவர்கள் வயதிற்கு ஏற்ப உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ப வாரம் இருமுறையாவது உறவு கொள்வது, உடல் ஆரோக்கியத்தைக் காத்திட பெரிதும் உதவிடும். உடலுறவு அவசியமே!

பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டியவை

feeding pillow

பாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும் என எச்சரிக்கை செய்துள்ளனர் கனடா நாட்டு மருத்துவர்கள்.

கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும் . அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத் தக்கது.

பாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.

தாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.

தாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.