சனி, 31 ஜனவரி, 2015

மா‌‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை இ‌னி‌‌க்கு‌ம்

காத‌லவ‌ங்‌கி‌ததுவ‌க்வே‌ண்டிஅள‌வி‌ற்ககாதலு‌க்கு‌பப‌ஞ்ச‌மஏ‌ற்ப‌ட்டு‌விடுமேஎ‌ன்றஅ‌ஞ்வே‌ண்டிய ‌நிலவ‌ந்து‌வி‌ட்டது. த‌ற்போ‌திரு‌க்கு‌மகால‌க்க‌ட்ட‌த்‌தி‌ல் ‌திருமண‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன்பஏ‌ற்படு‌ம் ‌சில ‌பிர‌ச்‌சினைக‌ளினா‌லகுடு‌ம்உறவுக‌ளத‌விடுபொடியா‌கி‌ககொ‌ண்டிரு‌க்‌கிறது.

இத‌ற்கெ‌ல்லா‌மஅடி‌ப்படை‌‌ககாரண‌மதா‌ம்ப‌த்‌திஉற‌வி‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்ச‌ரிவு ‌நிலஎ‌ன்றமரு‌த்துவ‌ர்க‌ளகூறு‌கி‌ன்றன‌ர்.

எ‌ந்த ‌பிர‌ச்‌சினையாஇரு‌ந்தாலு‌மமரு‌த்துவரஅணுகு‌‌மத‌ம்ப‌திக‌ள், தா‌ம்ப‌த்உற‌வி‌லஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைகளு‌க்கமரு‌த்துவரஅணுபெ‌ரிது‌மத‌ய‌ங்கு‌கி‌ன்றன‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌னமரு‌த்துவ‌ர்களே, இதுபோ‌‌ன்ற ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ‌விள‌க்க‌மசொ‌ல்மு‌ன்வரு‌‌‌கி‌ன்றன‌ர்.
https://naveenchavan.files.wordpress.com/2012/10/husband-wife.jpg


அதாவது ‌சில ‌விஷய‌ங்களமா‌ற்‌றி‌பபாரு‌ங்க‌ளஎ‌ன்பதஅவ‌ர்களதமுத‌லஆலோசனை. ‌சில‌ த‌ம்ப‌திக‌ளஎ‌ப்போது‌மஇர‌வி‌லம‌ட்டுமஉறவகொ‌ள்வா‌ர்க‌ள். தூ‌க்களை‌‌ப்‌பிலு‌ம், உடலு‌க்கஉற‌க்க‌மதேவை‌ப்படு‌மநேர‌த்‌திலு‌மஉறவகொ‌ள்வதா‌லஅ‌தி‌லஒரச‌லி‌ப்பஏ‌ற்படலா‌ம். ‌சிநேர‌ங்க‌ளி‌லகாலை‌யி‌லகு‌ளி‌த்தமுடி‌த்தஉடலு‌ம், மனமு‌மஉ‌ற்சாகமாஇரு‌க்கு‌மபோதஉறவகொ‌ள்வ‌தி‌ல் ‌நி‌ச்சய‌மபுது‌விதமாமா‌ற்ற‌த்தஉணமுடியு‌ம்.

அதபோலவே, இரு‌ட்டி‌லஉட‌லஉறவகொ‌ள்ளு‌மத‌ம்ப‌திக‌ள், ‌சி‌றிதவெ‌ளி‌ச்ச‌த்‌திலு‌ம், வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌லஉட‌லஉறவகொ‌ள்ளு‌மத‌ம்ப‌திக‌ளலேசாஇரு‌ட்டிலு‌மஉட‌லஉறவகொ‌ள்ளலா‌ம்.

எ‌ப்போது‌மஒரமுறை‌யிலாஉட‌லஉறவகூச‌லி‌ப்பஏ‌ற்படு‌த்தலா‌ம். எனவஉட‌லஉறவகொ‌ள்ளு‌மமுறைக‌ளிலு‌மமா‌ற்ற‌ங்களஏ‌ற்படு‌த்‌தி‌ககொ‌ள்ளலா‌ம்.

அ‌ன்பவெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாக..

உட‌லஉறவஎ‌ன்றது‌மஒரு ‌சில ‌நி‌மிட‌ங்களபோது‌மஎ‌ன்று ‌நினை‌க்காம‌ல், அத‌ற்காஅ‌திநேர‌த்தஒது‌க்‌கி கணவ‌ன் - மனை‌வி இருவருமத‌ங்களதஅ‌ன்பவெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ‌விதமாநட‌ந்தகொ‌ள்வதந‌ல்லது. உட‌லஉறவகொ‌ள்இ‌ந்நா‌ட்க‌ளம‌ட்டுமஎ‌ன்றப‌ட்டிய‌லபோ‌ட்டு‌ககொ‌ள்ளாம‌லத‌ம்ப‌திக‌ளி‌னஆசை‌‌க்கே‌ற்உட‌லஉறவவை‌த்து‌ககொ‌ள்வதந‌ல்த‌ம்ப‌த்‌திய‌த்‌தி‌ற்கவ‌ழிகோலு‌ம்.

ஒருவ‌ரஉட‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஇரு‌க்கு‌மபோதோ, அ‌திகளை‌ப்படை‌ந்‌திரு‌ந்தாலேஅ‌ந்சமய‌த்‌தி‌லஉட‌லஉற‌வி‌ற்கஅழை‌ப்பததுணைவ‌ரத‌வி‌ர்‌க்வே‌ண்டு‌ம். அ‌ந்சமய‌த்‌தி‌லஉ‌ங்களதஆதரவு‌ம், அ‌ன்பு‌மஅவரு‌க்கு‌ததேவஎ‌‌ன்பதை ‌நினை‌வி‌லகொ‌ள்ளவு‌ம்.

பி‌ரி‌ந்‌திரு‌ந்தாலு‌மபலன‌ளி‌க்கு‌ம்...
 
http://www.adventuresinexpatland.com/wp/wp-content/uploads/2011/07/Sad-Expat-Woman.jpg
ஒரு ‌சில‌ த‌ம்ப‌திக‌ளஒரஅலுவலக‌த்‌தி‌லப‌ணியா‌ற்‌றி‌ககொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளஎ‌ப்போது‌மகூடவஇரு‌ப்பதா‌லஒரச‌லி‌ப்பஏ‌ற்படுவது‌மஉ‌ண்டு. இ‌ப்படியான‌வ‌ர்க‌ள் ‌சிநா‌ட்களு‌க்கு ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பது‌ம் (ச‌ண்டபோ‌ட்டஅ‌ல்ல) பெ‌ணதா‌ய் ‌வீ‌ட்டி‌லேஅ‌ல்லததோ‌ழி‌யி‌ன் ‌வீ‌ட்டிலேசெ‌ன்றத‌ங்‌‌கி‌யிரு‌க்கலா‌ம்.‌ ‌சிநா‌ட்களு‌க்ககணவ‌ன் - மனை‌விய‌ர் ‌பி‌ரி‌ந்‌திரு‌ப்பதஅ‌ன்பை‌ககூ‌ட்டவு‌மசெ‌ய்யு‌ம்.

பி‌ரி‌ந்‌திரு‌க்கு‌மநா‌ட்க‌ளி‌லம‌ணி‌க்கண‌க்‌கி‌லபோ‌னி‌லபே‌சி‌ககொ‌ண்டிரு‌க்காம‌லமுழுவதுமாஒருவரஒருவ‌ரசுத‌ந்‌திரமாக ‌வி‌ட்டு‌விடுவது‌மஅவ‌ர்களு‌க்கு‌ளஇரு‌‌க்கு‌மஅ‌ன்பஒருவரு‌க்கொருவ‌ரபு‌ரிவை‌க்ஏதவாகு‌ம்.

கால‌மகட‌ந்தவ‌ர்க‌ள்..

தாம்ப‌த்ய‌த்‌தி‌லவெறு‌ப்படை‌ந்த ‌நிலை‌யி‌லஇரு‌ப்பவ‌ர்க‌ளத‌ம்ப‌திக‌ளஒருவரு‌க்கொருவ‌ரபே‌சி, ஒரு ‌சிநா‌ட்க‌ள், வார‌ங்க‌ள், மாத‌மஒரகால‌கக‌ட்ட‌த்தை ‌நி‌ர்ண‌யி‌த்து‌ககொ‌‌ண்டஅதுவரதா‌ம்ப‌த்ய‌மவை‌த்து‌ககொ‌ள்வ‌தி‌ல்லஎ‌ன்றமுடிவெடு‌ங்க‌ள். ஆனா‌ல், இ‌ந்சமய‌த்‌தி‌லஎ‌ல்லா‌மத‌னி‌த்த‌னியாஇரு‌ந்து ‌விடாம‌லஒருவரஒருவ‌ர் ‌சீ‌‌ண்டி‌ககொ‌ண்டிரு‌‌க்கலா‌ம். இதனா‌லதா‌ம்ப‌த்ய‌த்‌தி‌ன் ‌மீதஒரஏ‌க்‌க‌ம் ‌பிற‌க்கு‌ம். ஒரவேளஇ‌ந்முய‌ற்‌சி‌யினா‌ல், கால‌ககெடவரகா‌த்‌திரு‌க்முடியாம‌லகூட ‌சித‌ம்ப‌திக‌ளத‌ங்களததா‌ம்ப‌த்ய‌த்தஅனுப‌வி‌க்கு‌ம் ‌நிலஏ‌ற்படலா‌ம்.

எனவஎ‌தையு‌மமுழரசனையோடு‌ம், அ‌ன்போடு‌மசெய‌ல்படு‌ங்க‌ள். உ‌ங்க‌ளதுணவா‌ழ்‌க்கை‌ததுணையாகு‌மஎ‌ன்‌கி‌ன்றன‌ரமரு‌த்துவ‌ர்க‌ள்.

உங்கள் இதயம் பற்றிய அரிய தகவல்கள்



  • மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று  இதயம். இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக்  கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க  முடியும். பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய  உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30)  சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும். (எலி -  நிமிடத்திற்கு 500-600).   மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
  • மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும். 
  •  இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம்  சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தத்தை  அனுப்புகிறது
  •  இதயத்தின் ரத்தக் குழாய்களின் மொத்த நீளமானது நம் நாட்டில் உள்ள ரயில்வே  இரும்புப் பாதையன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம்.  மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம்  பெற்றுள்ளது
  •  நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
  • ‘ஆலீவ்’ எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்து மென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
  • மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை.  இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை  பயன்படுத்துவதுதான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது
  •  மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு  30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன  .
  • ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக்  கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு  மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது. 
  •  ஒரு  நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை டலின் பல  பாகங்களுக்கும் அனுப்புகிறது.
  •  ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு  (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே  கணக்கிட்டு கொள்ளுங்கள்)
  •  பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  •   நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
  • கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
  •  நாம் இதயத்தின் மேல் கை வை என்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின்  இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில் இரண்டு  நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று  இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
  •  லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது  என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே  இந்த சத்தம் உருவாகிறது.
  • ஒவ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல்  ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது.
  •  1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது.  
  • பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது.
  • காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை &  ஞாபகம் & நினைவு & மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு  திங்கட்கிழமைதான் ஏற்படுகிறது.
  • சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.
  • நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்தநாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும்.
  • ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
  • உலக முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5 கோடியாகும்.
  • அறிய வேண்டிய தகவல்கள்!

    1)பிறக்கும்போது மனித உடலில் 300 எலும்புகள் உள்ளனவாம்;வளர்ந்த பின் 206 தான் உள்ளனவாம்!(94 ஐ யாரோ திருடிட்டுப் போயிட்டாங்க போல)
    2)மனித இதயம் ஒரு நாளைக்கு 1,00,000 தடவைக்கு மேல் துடிக்கிறதாம்
    3)தலை வெட்டுப்பட்டாலும் ஒரு கரப்பு பல நாட்கள் வாழுமாம்;கடைசியில் அது பட்டினியால் சாகிறதாம்!
    4)பூமியின் எடை-6,600,000,000,000,000,000,000 டன்களாம்.
    5)ஒரு சதுரக் காகித்த்தை ஏழு தடவைக்கு மேல் பாதியாக மடிக்க முடியாதாம்
    6)கிளினோஃபோபியா என்பது படுக்கையைக் கண்டு பயப்படுவதாம்
    7)ஒரு வயலினில் கிட்டத்தட்ட 70 மரத்துண்டுகள் உள்ளனவாம்
    8)மின்னலால் உண்டாகும் சூடு,சூரியனின் பரப்பில் உள்ள சூட்டை விட 5 மடங்கு அதிகமாம்.
    9)சமாதானத்துக்கான நோபல் பரிசு மெடலில் தோள் மேல் கை போட்டு நிற்கும் மூன்று நிர்வாண ஆண்களின் உருவம் உள்ளதாம்
    10)உலகில் மிக அதிகமாக உள்ள பெயர் முகமது என்பதுதானாம்
    11)சீட்டுக் கட்டில் ஆட்டின் ராஜாவுக்கு மட்டும் மீசை இல்லையாம்.
    12)மின்சார பல்ப் கண்டு பிடித்த எடிசனுக்கு இருட்டைக் கண்டால் பயமாம்
    13)உலகில் 10 லட்சம் விதமான மிருகங்கள் உள்ளனவாம்
    14)ஒரு சராசரி மனிதன் ஒரு ஆண்டில்  1460க்கும் மேற்பட்ட கனவுகள் காண்கிறானாம்.
    15)முள்ளம்பன்றிகள் தண்ணீரில் மிதக்குமாம்.
    16)சூரியன் ,பூமியை விட 330330 மடங்கு பெரியதாம்.
    17)காட்டுத்தீ,மலையில் கீழ் நோக்கிப் பரவுவதை விட,மேல் நோக்கி வேகமாகப் பரவுமாம்.
    18) ஒரு 75 வயது மனிதன் வாழ்வில் 23 ஆண்டுகள் தூங்கியிருப்பானாம்!

    மனைவியிடம் பேசுங்கள்




    மனைவியிடம் பேசுங்கள் ! - திருச்சி சிவா M.P


    பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.

    அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.

    இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.

    ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.

    பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.
    எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.

    மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.

    1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.

    விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், எண்ணைக்கான வருவோர் அதனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி.

    பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள். பண்டிகைகளும், திருநால்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.

    இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தன ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது.
    நேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.

    காலம் கடந்து பயன்படுத்தினால் பயனத்துப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.

    இத்தனை கற்றும் கடமை தவரியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசகினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருபாயே.

    ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததைஎல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.
    நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.

    பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிரவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........
    இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.
    எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருதப்படதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார்.

    நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. 
    ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என சொன்னேன்.

    ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோj ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.
    தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.
    என் மனைவிக்கு என்னை உணர்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்

    உங்களுக்காகவே
    உங்கள் பிள்ளைகளை,
    உங்கள் பிரச்சனைகளை,
    உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!

    நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.

    என் வேதனை,
    நான்படும் துயரம்
    வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம்
    அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின்
    நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............
    இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.