புதன், 30 ஜனவரி, 2013

மார்பகங்கள் – உடலியல் உண்மைகள்! – டாக்டர் கே.எஸ்.ஜெயராணி



பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவ னிப்பிற்குரிய உறுப்பாக இருப்ப வை, மார்பகங்கள். இவை, பலருக் கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என் றால், ‘சிறிதாக இருக்கிறது என்று ம், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து, தொ ங்கி காணப்படுகிறதுஎன்று கவ லைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மை களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லு மோ அதைப் போன்றுதான் மார்பகக் கா ம்பின் அடிப்பகுதியில் பெரி தும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள் ளன. இவற்றை சூழ்ந்துதா ன் மார்பகத் தசை பெருகும்.

மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அள வும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறை பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவ றானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந் தம் இல்லை.

டீன்ஏஜ் பெண்களில் பலர் தங் களது மார்பகங்களில் ஒன்று சிறியதா கவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண் மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்க ளோகூட இரண்டும் ஒரே அள வில் இருப்பதில்லை. அது போலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை

ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால் தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண் டிய அவசியம் இல்லை. அளவு, வடிவ த்தில் பெரிய அளவில் வித்தியா சம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெற வே ண்டும்.

பொதுவாக இரண்டு மார்பகங்க ளும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழி முறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கி றது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடி யாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்ப கத்தில் இல்லை.

ஹார்மோன் மருந்து மாத்திரை களால் மார்பகங்களை பெரி தாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக் கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறு வை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உரு வாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத் து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.

இயற்கையாகவே மார்பகங்கள் பெரி தாக அமையப்பெற்ற பெண்கள், அத னால் பெரும் அவஸ்தைப்படுவதுண் டு. சிறிதாக்க வேண்டும் என்று அவ ர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முது குவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலா ம். இல்லா விட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைக ளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இரு க்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப் பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப் பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன் றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோ க்கி இழுத்த நிலையி லும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தர வே ண்டும் என்பதுதான்!

சில மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்பு கள் விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படி யில்லையேஎன்று சில பெண்கள் கேட்கிறார்கள். அந்த போ ட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள் காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி, விரைத் து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. மார் பகங்கள் தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கி யமாய் பரா மரிக்கத் தகுந்தவை.

இணையத்தில் இருந்ததை இதமுடனே பகிர்கிறோம்.

பெண்களின் திகைக்க வைக்கும் `தாம்பத்ய’ ஆர்வம்!! (புதிய சர்வே வெளிப்படுத்தும் ரகசியங்கள்)



இந்தியன் அசோசியேஷன் ஆப் செக்ஸாலஜிஎன்ற அமைப்பு சென் னை யில் இயங்கிவருகிறது. இந்த அமைப்பினர் `இந்தியாவில் திரும ணமான பெண்களின் செக்ஸ் ஆர் வம்- அதில் அவர்களது விருப்பங் கள்- வெறுப்புகள்- செக்சில் அவர் களது எதிர்பார்ப்புகள்போன்றவை களைப் பற்றி புதிய சர்வே ஒன் றினை எடுத்துள்ளனர். அந்த சர்வே யை அடிப்படையாக வைத்து பெண்களின் தாம்பத்ய ஆர்வத்தில் கடந்த பத்தாண்டுகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று ஆய்வு செய்கிறார்கள்.

சமீபத்தில் இந்த அமைப்பினர் மேற்கொ ண்ட சர்வே, திருமணமான பெண் களின் தாம்பத்யத்தில் ஏற்பட்டிருக்கும் நவீன கால மாற்றங்களை ருசிகரமாக வெளிப் படுத்துகிறது. அதில் சில சிந்திக்க வைக் கும் விதத்தில் உள்ளது. “இந்த மாதிரி யான கருத்துக் கணிப்புகளை பொதுமக் கள் படிக்கும்போது பெண்களின் மாறிவ ரும் மன நிலையையும், மாறிவ ரும் கால சூழலையும் புரிந்துகொண்டு அதற்கு தக்க படி தங்கள் மண வாழ்க்கையை அமைத் துக் கொள்வார்கள்என்கிறார், இந்த அமைப்பின் தலைவர் பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ். அவர் வெளி யிட்டிருக்கும் `தாம்பத்ய கருத்துக் கணிப்பின்முக்கிய விவ ரங்கள் இங் கே தரப்படுகின்றன.

`கணவருக்கு தாம்பத்ய சுகத்தை கொடுப்பது மனைவியின் கடமைகளில் மிக முக்கியமா னதுஎன்ற கருத்து தமிழக பெண்களிடம் இப் போதும் வேரூன்றி இருக்கிறது. கணவரு க்கும்- மனைவிக்கும் வேறுவிதமான பொழுது போக்கு வா ய்ப்புகள் மிக குறைவாக இருப்ப தால், தமிழ்நாட்டு தம்பதிகள் 30-35 வயது வாக்கில் வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. டெல் லி, மும்பை போன்ற நக ரத்தில் உள்ள அதே பருவ தம்பதிகள் இதர வெளி பொழுது போக் குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம் பத்ய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள்.

68 சதவீத தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். மாத த்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 7 சதவீத பெண்கள் கூறியி ருக்கிறார்கள். மீத முள்ள வர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின் பற்றுகிறார்கள். மும்பை, டெல்லியில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீத முள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாத த்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக் கிறார்கள்.

`தாம்பத்ய தொடர்பில்உள்ள நிறை குறை களை கணவரிடம் விவா திக்கும் விஷயத் தில் தமிழக பெண்கள் இப்போதும் வட இந் திய நகர பெண்களை விட பின் தங்கியிருக்கி றார்கள். `அதுபற்றி பேச மாட்டோம். பேசுவது கணவருக்கு பிடிக்காதுஎன்று 42 சதவீத பெண் கள் கூறியிருக்கிறார்கள். குறிப்பால் உணர்த் துவதாக 29 சதவீத பெண்களும், `தயக்கமின் றி பேசுவோம்என்று 14 சதவீத பெண்களும் கூறியிருக்கிறார்கள். 15 சதவீத பெண்கள் அவரால் அவ்வளவுதான் முடியும். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறதுஎன்று பட்டவ ர்த்தனமாக கருத்து தெரி வித்திருக்கிறார்கள். மும்பை, டெல்லி பெண்களில் 81 சதவீதம்பேர் `தாம் பத்யம் நடந்து முடிந்த பின்பு அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம் விட்டுப் பேசுவதாககூறி யிருக்கிறார்கள்.

உறவுக்கு முந்தைய `முன்விளை யாட்டுகள்விஷயத்தில் சென்னை பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவ தாகக்கூறி, செக்ஸாலஜிஸ்ட்டுக ளை திகைக்க வைத்திருக்கிறார் கள். 92 சதவீதம் பேர் அதை விரும் புவதாகவும், அதில் 64 சதவீதம் பேர் தங்கள் ஆசை நிறைவேறுவ தாகவும் கூறியிருக்கிறார்கள். டெ ல்லி பெண்கள் இதில் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள்  மூன்றாம் இடத்தையும் பிடிக் கிறார்கள்.

ஆசையை வெளிப்படுத்தி, தா ம்பத்யத்திற்கு கணவரை ழைப்பதில் இன்னும் பெண்க ள் பழைய நிலையிலே இரு ப்பதாக சர்வே குறிப்பிடுகி றது. 81 சதவீத பெண்கள் கண வரின் விருப்பமே அதில் தொ டக்கமாக இருக்கி றது என்கிறார்கள். 7 சதவீத பெண்கள், `அவருக்கு அலு வலகத்தில் வேலை முடியும் முன்பே, போன் செய்துசீக்கிரம் வந்து விடுங்கள் உங்களுக்காக காத்திருக்கி றேன்-’ என்று குறிப்பால் உணர்த்துவதாக சொல் கிறா ர்கள். `மாத வில க்கு முடிந்த அடுத்த சில நாட் களில் இய ல்பாகவே ஆசை அதிகரிக் கும். அப்போது டை, உடை, பேச்சு மூலம் எளிதாக கண வரை ஈர்த்து தயாராக்கி விடு வோம்என்றும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியிருக் கிறார்கள்.

பின்விளைவற்ற கருத்தடை சாதனமா பெண்கள் அதிகம் விரும்புவது எது என்ற கேள்விக்கு, மும்பை, டெல்லி பெண்கள், `கணவரை ஆணுறை பய ன்படுத்தக்கூறுவோம்என்கிறார்கள். தென்னிந்திய பெண்கள் தாங்கள் கரு த்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கணவரை சுதந்திரமாக விட்டுவிடு வோம்என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் கடந்த காலங்களில் அதிக கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்திய பெண்களில் 58 சதவீதம் பேர் வரை, `அதிக அளவில் கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். அத னால் அதை முடிந்த அளவு குறைக்கிறோம்என்கிறார்கள். முதல் குழந் தை பெற்ற பெண்களில் 39 சதவீதம் பேர் பாது காப்பான கருத்தடை முறையாக `கா ப்பர்- டிபொருத்துவதை குறிப்பிட்டி ருக்கிறார்கள்.

திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்த பெண்களிடம், `நீங்கள் உறவில் எந்த அளவிற்கு திருப்தி அடைகிறீர்கள்?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 31 சதவீத பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகக் கூறியிருக்கி றார்கள். 44 சதவீத பெண்கள் திருப்திபட்டுக் கொள்வதாகவும், 12 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக் கிறார்கள். மீதமுள்ளவர்கள் கருத்து கூற மறுத்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயத்தை செக்ஸாலஜிஸ்ட்டு சுட் டிக்காட்டுகிறார். “தற்போதைய இயந் திரமய வாழ்க்கையால் பெண்கள் முழு மனதோடு உறவில் ஈடுபடுவது குறை ந்து வருகிறது. குழந்தைகள் பற்றி யோ, பண நெருக்கடி பற்றியோ, வே லை பார்க்கும் இடங்களில் உள்ள சிக் கல் பற்றியோ, கணவரால் ஏற் படும் பொதுவான குறை பாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக் கொள்வதால் அவர்கள் முழு மன தோடு உறவில் ஈடுபடுவதில் லை. அதனால் தம்பதிகள் இருவருக்கு மே அதில் திருப்தி ஏற்படாமல் போ ய் விடுகிறது. திருப்தியின்மை யால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். திருப்தியடையாத பெண்கள் கணவரிடம் எரிச்சல்படுகி றார்கள். அது கோபமாகவும், சில நேரங்க ளில் பகையாகவும் மாறு கிறது…”- என்கிறார்.


சரி.. பெண்கள் கணவரோடு உறவில் இருக்கும்போதும் எதைப் பற்றி நினை ப்பார்கள்?  நாளை என்ன சமையல் செய்வ து?’ என்று பெரும்பாலான பெண்கள் அந்த நேரத்திலும் யோசனையில் ஆழ்கிறார்கள்இந்த நேரம் பார்த்து குழந்தை விழி த்துவிட்டால் என்ன செய்வது?’ என் கவலையும் தங்களை வாட்டும் என்று சொல்கிறார்கள்இவர் எப்போது முடிப்பார்.. நாம் தூங்கி, காலையில் எழுந்து அத்தனை வேலையையும் பார்க்க வேண்டுமே..!’ என்று உறவு நேரத்தில் பெண்கள் கவலைப்படுவதும் உண்டு என்கிறது இந்த ஆய்வு.
கணவரோடு செக்ஸ் வைத்து க்கொள் வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன் றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு கிடை த்திருக்கும் பதில் சுவாரஸ்ய மானது.

51 சதவீத பெண்கள் `கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம்என்று கூறியிருக்கிறார்கள். 38 சதவீத பெண்கள் `கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவ ரோடு ஜோடியாக நடனம் ஆட வே ண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவைஎன்று கூறியிரு க்கிறார்கள். மீத முள்ளவர்களே `அவரோடு தனிமையில் உட்கா ர்ந்து சிரித்து மகிழ்ந்து பேசி விட்டு, உறவினைத் தொடர்வோம்என்கி றார்கள்.

தாம்பத்ய உறவு திருப்தியாக நடந்துமுடிந்த பின்பு அதன் மூலம் உங்க ளுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன? -என்ற கேள்விக்கு …..
எங்களுக்கு இடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் எல்லாம் அடியோடு நீங்கி, புதிதாய் இணை ந்த ஜோடிபோல் குதூகலமாய் வா ழ்க் கையை நகர்த்தி, அடுத்த முறை இணைவதை ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்என் று 37 சதவீத பெண்கள் கூறியி ருக்கிறார்கள்.

- அவ்வப்போது ஏற்படும் உடல் வலி யும், தலைவலியும் அதன் பின்பு சில நாட்கள் காணாமல் போனது என்று 21 சதவீதம் பேர் கூறியிருக்கிறார் கள்.
- உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத் தை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறி யிருக்கிறார்கள்.

பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து ள்ளனர்.  மனதுக்குள் விவரிக்க முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எனக்காக அவரும், அவரு க்காக நானும் வாழ்கிறோம் என்ற திருப்தி யையும், நம் பிக்கையையும் திருப்தியான தாம்பத்ய உறவு ஏற்படுத் தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.

செக்ஸ் உறவின்போது ஆண்கள் மட்டுமே ‘ஆரம்பிப்பது’ ஏன்?




பெரும்பாலான ஆண்களுக்கு இந்தக் கவலை இருக்கும். ‘எல்லாத்தையும்நாமதான் ஆரம்பிக்கனும், நம்மாளு எதையுமே செய்வதில்லை என்ற கவலைதான் அது.

செக்ஸ் உறவின்போது பெரும்பா லான ஆண்களின் மனதில் தோன்றும் சலிப்புதான் இது. நான்தான் தொடங்க வேண்டும். அவங்க பாட்டுக்கு கம் முன்னு இருப்பாங்க, என்னிக்காச்சும் அவங்க ஆரம்பிச்சு வச்சுருக்காங்களா என்ற சலிப்பும் பல ஆண்களிடம் உள்ளது.

ஏன் பெண்கள் செக்ஸ் விஷயத்தில்லீட்பண்ண மாட்டார்கள், அவரே ஆரம்பிக்கட்டும், முன்னேறட்டும் என்று காத்திருக்கிறார்கள்?. இதற்கு நிபுணர்கள் தரும் பதில் இது

பெரும்பாலான ஆண்கள் என்றில்லை, கிட்டத்தட்ட அத்தனை ஆண்களுக்குமே இந்தக் கேள்வி மனதில் எழுவதற்கு வாய்ப்புள்ளது. காரணம், பெரும்பாலும் ஆண்கள்தான் செக்ஸ் உறவின்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைக்கிறார்கள். அதன் பிறகுதான் பெண்கள் டேக் ஓவர் செய்து கொள் கிறார்கள்.

சில சமயங்களில், நமது மனைவிக்கு செக்ஸ் பிடிக்கவில்லையா, இப்படி அமைதியாக இருக் கிறாரே என்ற சந்தேகம் கூட சிலருக்கு எழலாம். பலருக்கு ஒரு வேளை நமதுமூவ்கள் சரியாக இல்லையோ என்ற சந்தேகம் கூட எழலாம்.

முன் விளையாட்டுக்களில் மனைவிக்கு ஆர்வம் இருக்கிறதா, இல்லையா என்பது கூட பலருக் குப் புரிபடுவதில்லை. இப்படிப்பட்ட சிந்தனைக ளால் பல ஆண்கள் குழம்பிப் போவது நிஜம் தான்ஆனால் இதெல்லாம் இந்த அளவுக்கு குழம்பிப் போக வேண்டிய பெரிய விஷயமில்லை. சாதாரணமானவைதான்.
பெண்கள் எதையும் ஆரம்பிப்பதில் தயக் கம் காட்ட சில காரணங்கள் உள்ளன.

நாமே தொடங்கினால் நம்மவருக்கு ஏதாவது ஈகோ பிரச்சினை வந்து விடுமோ என்று பல பெண்கள் முதல் அடி எடுத்து வைக்க தயக்கம் காட்டுகிறார்களாம்.
நாமே முந்திக் கொண்டு போனால் நம் மைப் பற்றித் தவறாக நினைத்து விடுவா ரா என்ற சந்தேகமும் பல பெண்களுக்கு எழுகிறதாம். நாம்தான் சரியானசிக்னல்கொடுத்தாச்சே, புரிந்து கொண்டு களம் இறங்க வேண்டியதுதானே என்று பலர் நினைக்கிறார்களாம்.

நான் சரியான முறையில்தான், உறவுக்கு ரெடி என்பதை மறைமுகமாக உணர்த்துகிறேன். அவர்தான் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்று பல பெண்கள் புகார் பட்டியலுடன் உட் கார்ந்திருக்கிறார்கள்.
பட்டவர்த்தனமாக எப்படி பளிச்சென சொ ல்வது என்ற தயக்கம் ஏற்படுவதாக பல பெண்கள் சொல்கிறார்கள்.

ஆரம்பிப்பதில் அவர் தான் கில்லாடி, எக் ஸ்பர்ட், அதனால்தான் நான் மெளனம் காக்கிறேன் என்பதும் பல பெண்கள் சொல்லும் வாதமாக இரு க்கிறதுஎனவே காதல் மற்றும் உறவில் ஈகோ என்பது பார்க்கப்படக்கூடாத ஒன் று. யார் ஆரம்பித்தால் என்ன, முடியும்போது அது சிறப்பாக, சந்தோ ஷமாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.


அந்த நான்கு சுவருக்குள் தனிமையில் இருக்கும்போது இருவருக்கும் இடையே எந்தவிதமான தயக்கமோ, வெட்கமோ, கெளரவம் பார்ப்பதோ இருக்கக் கூடாது. ஆடைகளுடன் சேர்த்து அவற் றையும் தூரப் போட்டு விட வேண்டும். அப்போ துதான் உறவு இனிக்கும், சிறக்கும்மேலும், பார்ட்னரிடமிருந்து வரும்சிக்னலைசரி யாக புரிந்து கொள்ள வேண்டியது இருவரின் கட மையுமாகும்

சிக்னல் வந்து விட்டால், அடுத்தவர் வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அதை விட்டு விட்டு, இல்லை, இல்லை வாயைத் திறந்து கேட்டால்தான் ஆச்சு என்று வறட்டுப் பிடி வாதமாக இருக்கக் கூடாதுஒரு வேளை கணவர் பிசியாக இருந்து கொண்டிருப்பார். அப்போது பார் த்து மனைவி அருகே வந்து கன்னத் தில் முத்தமிடலாம், கொஞ்சலாம். அதல்லாம்தான் உறவுக்கு அழைப்ப தற்கானசிக்னல்கள். எனவே பிசியா இருந்தாலும் கூட அந்த சமிக்ஞை களை சரியாக புரிந்து கொண்டு செய ல்பட்டால் பிரச்சினை இல்லை.

மனைவி ஆரம்பிக்கட்டும், அவரே எல்லாவற்றையும் தொடங்கட்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை தாராளமாக அவரிடம் வெளிப் படையாக சொல்லி விடலாம். அடுத்த முறை உங்களை அசத்த அவரும் தயாராக இருப்பார்.

மொத்தத்தில் அன்பைக் காட்டவும், அருகாமையை இனிமையாக்கவும் வெளிப்படையான மனதும், செயல்பாடுகளும் முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டால், ‘ஸ்டார்ட்டிங் டிரபுள்இருக்கவே இருக்காது.


கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!! (மருத்துவ ஆய்வின் முடிவு)




செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம்
எனப்படும் உச்ச நிலையை அடை வதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆர்கசம் எனப்படும் உச்சநிலை யை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இது மன நிலை சம்பந்தப் பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரம மான காரியம் இல் லை.அப்படியும் முடியாவிட்டால் மருத்துவ, தெரபி முறைகள் கைவசம் நிறையவே உள்ளன.

தற்போது ஆர்கசம் அடைவதில் ஏற்படும் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். கவனச் சித றல்தான் ஆர்கசத்தை அடைவ தில் சிக்கல் ஏற்பட முக்கியக் கா ரணம் என்கிறது இந்த ஆய்வு.
மேலும் செக்ஸ் உறவு குறித்த எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டிரு க்கும்போதும் சம்ப ந்தப்பட்ட பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதில்லையாம்.
என்னத்தஎன்ற எண்ணத்துடன் செக்ஸ் உறவில் நுழைந்தால் நிச்சயம் ஆர்கசத்தை அடைவது சிரமம் என்கிறது இந்த ஆய்வு. இப்படிப்பட்ட எதிர்மறை சிந்தனைகள், கவனச் சிதறல்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கவனச் சிதறல் இல் லாமல், மனம் ஒருமுகப்பட்டு, செ க்ஸ் உணர்வை அனுபவித்து, லயி த்து ஈடுபடும் பெண்களுக்கு ஆர்க சம் மிக எளிதாக ஏற்படுகிறதாம்.




நான்கு பெண்களில் ஒருவருக்கு மாதம் ஒருமுறையாவது ஆர்கசத் தை எட்டுவதில் சிரமம் ஏற்படுகிற தாம். செக்ஸில் நாட்டமின்மை பிரச்சி னைக்கு அடுத்து பெண்கள் அதி கம் சந்திக்கும் 2வது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை இந்த ஆர்கச த்தை அடைவதில் சந்திக்கும் சிக்கல் என் கிறார்கள் செக்ஸ் மருத்துவ நிபுணர்கள்.

இந்த ஆய்வுக்காக செக்ஸ் உறவில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயது வரையிலான 191 பெண்களை உட்படுத்தினர். செக்ஸின்போது அவர் கள் ஆர்கசத்தை அடைந்தது குறித்து ம், அப்போது எந்த சிந்தனை யில் இருந்தனர் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

செக்ஸ் மோசமான ஒன்று என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும், செக்ஸ் உறவின்போது ஆர்கசம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான செக்ஸ் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.