செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

தக்காளி கொத்துமல்லி சட்னி


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 2
கொத்துமல்லித்தழை (நறுக்கியது) - 1/2 கப்
பச்சை மிளகாய் - 3
புளி - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளியை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் உளுத்தம் பருப்பைப் போட்டு சற்று சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்தவுடன், அதில் பச்சை மிளகாயைக் கீறிப்போட்டு வதக்கவும். பின்னர் அதில் புளியைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். அதன் பிறகு தக்காளித்துண்டுகளைச் சேர்த்து, பெருங்காயப் பொடியையும் போட்டு மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும். கடைசியில் அத்துடன் கொத்துமல்லித் தழையையும் சேர்த்து ஒரு வினாடி வதக்கி, இறக்கி ஆற விடவும். பின்னர் அத்துடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுத்து, கடுகு தாளித்துக் கொட்டவும். (அரைக்கும் பொழுது தண்ணீர் சேர்க்க தேவையில்லை.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக