வெள்ளி, 16 செப்டம்பர், 2011

கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய்



கர்ப்பிணிப் பெண்களுக்கு காமாலை நோய் தாக்கம் பல காரணங்களால் வருகிறது. அதில் உணவு பழக்க வழக்கத்தாலும் மனக் கவலையாலும் உண்டாகும் பாதிப்புகளை சென்ற இதழில் கண்டோம். பிற காரணங்களால் ஏற்படும் மஞ்சள் காமாலை என்ன என்று பார்ப்போம்.

கர்ப்பமுற்றிருக்கும்போது தாய்க்கு காமாலை வருவது என்பது மிக அரிதாக நடக்கக் கூடியதாயிருந்தாலும் அதனுடைய விளைவுகள் மிகவும் கடுமையானதாக தாய்க்கும் சேய்க்கும் அமைகிறது. வைரஸ் கிருமியால் ஏற்படும் மஞ்சள் காமாலை மிகவும் மோசமான விளைவுகளை தாய்க்கும் சேய்க்கும் ஏற்படுத்துகிறது. Hepatitis GB என்னும் வைரஸ் கிருமியால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. Hepatitis A, B,C,D & E என்று பல வகைகள் உள்ளன. வளர்ந்த நாடுகளில் 0.1 சதவீதம் கர்ப்பிணிப் பெண்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப் படுகிறார்கள். வளரும் நாடான நம் நாட்டில் 3-20 சதவீதம் வரை மஞ்சள் காமாலை நோயால் கர்ப்பமுற்ற பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் Hepatitis E வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் பெண்களில் 10--20 சதவீதம் பேர் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர்.

இதிலிருந்து நாம் அறிய வேண்டியது, எவ்வாறு கர்ப்பிணிப் பெண்களை நோய்க் கிருமி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேண்டும், மேலும் நோய் தாக்குதல் வந்தால் எவ்வளவு விரைந்து செயல்பட்டு மருத்துவம் செய்ய வேண்டும் என்பதே.

முதலில் நோய் தாக்குதலுக்கு உள்ளான கர்ப்பிணியை சுகாதாரமான சூழலில், தனிமையில் இருக்கச் செய்ய வேண்டும். இது மற்றவர்களுக்கு இந்த நோய் தொற்றாமல் தடுத்துவிடும்.

அவர்களுக்கு சரியான அளவில் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய அளவில் உணவுகளைக் கொடுத்து பராமரிக்கவேண்டும்.

அந்தந்த வைரஸ் கிருமி தாக்குதலுக்கு தக்க தடுப்பூசி (vaccine) மற்றும் இம்முனோகுளோபுலின் (Immuneglobulin) கொடுக்கப்பட வேண்டும்.

தாய்மார்கள் கருவுற்றிருக்கும் முதல் மூன்று மாத கால கர்ப்ப காலத்தில் Hepatitis B வைரஸ் ரத்தத்தில் உள்ளதா என்று அறியப்பட வேண்டும். அப்படி இருந்தால் அந்த பெண்ணுக்கு US Hepatitis B Immunoglobulin பிரசவம் ஆனவுடன் போடப்படவேண்டும். Hepatitis B தடுப்பூசி பிரசவம் ஆன 1 வார காலத்தில் ஒன்றும், மீண்டும் 1 மாத காலத்தில் ஒன்றும், பின் 6 மாத காலத்தில் ஒன்றும் கொடுக்கப்பட வேண்டும். அப்படி கொடுக்கப்பட்டால்தான் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுக்க முடியும்.

தாயிடம் இருந்து இந்த வைரஸ் தொற்று குழந்தைக்கு முதல் மூன்று மாத கர்ப்பகாலத்தில் மிகவும் அரிதாகவும், இரண்டாவது மூன்று மாத கர்ப்ப காலத்தில் 6 சதவீதமாகவும், கடைசி மூன்று மாத கர்ப்பகாலத்தில் 67 சதவீதமாகவும் தொற்றிக் கொள்கிறது.

இந்த வைரஸ் தொற்று இல்லாமல் சில சமயம் கர்ப்பிணி பெண்களிடம் மஞ்சள் காமாலை தென்படும். அதற்குக் காரணம் பித்தப்பையில் கற்கள் உருவாகுதல் ஆகும். இந்த கற்கள் ஓரளவிற்கு மேல் பெரிய அளவில் உருவாகும்போது பித்தப்பை வாயை அடைத்துவிடுவதால் மஞ்சள் காமாலை ரத்தத்தில் தென்படும். இதனோடு வலதுபக்க வயிற்றுப் பகுதியில் தாங்கமுடியாத வலியும் இருக்கும். இப்படிப்பட்ட சமயங்களில் ஒருசில நேரம் அறுவை சிகிச்சை செய்து கல்லை அகற்ற வேண்டிவரும்.

கர்ப்பிணிப் பெள்களுக்கு 5-6 மாத காலத்தில் உடலில் எல்லா இடங்களிலும் அரிப்பும் அதனோடு ரத்தத்தில் பித்த நீர் அளவு ( (Bile Acid) அதிகரிக்கும். அரிப்புடன் சில நேரம் ரத்தத்தில் Hepatitis அளவும் அதிகரிக்கும்.

மஞ்சள் காமாலை என்ன காரணம் கொண்டு ஏற்படுகிறது என்பதை பலவித சோதனைகள் மூலம் கண்டறிந்து அதற்கு தக்க மருத்துவம் செய்வது நன்று. ஆனால் பொதுவான சில உணவு முறைகளை மஞ்சள் காமாலை கண்ட தாய்மார்கள் பின்பற்ற வேண்டும்.

வருமுன் காப்பது நல்லது. அதனால் கர்ப்பம் தரிக்கும் முன்னாகவே ஏஞுணீச்tடிtடிண் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெய், நெய், எண்ணெய் பொருட்கள் நிறைந்த உணவுப் பண்டங்களை சாப்பிடக்கூடாது.

மிகுந்த காரமான உணவு, ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

காபி, டீ மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் முறையான Antenatal Check up செய்து தன்னையும் குழந்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக