புதன், 30 ஜனவரி, 2013

கவனச் சிதறல் இருந்தால் உச்சம் அடைய முடியாது!! (மருத்துவ ஆய்வின் முடிவு)




செக்ஸ் உறவின்போது கவனச் சிதறல் ஏற்படும் பெண்களுக்கு ஆர்கசம்
எனப்படும் உச்ச நிலையை அடை வதில் சிரமம் ஏற்படுவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

ஆர்கசம் எனப்படும் உச்சநிலை யை அடைவதில் பெண்களுக்கு பல்வேறு தடங்கல்கள், சிரமங்கள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான். இது மன நிலை சம்பந்தப் பட்டதுதான் என்பதால் இதை சரி செய்வது சிரம மான காரியம் இல் லை.அப்படியும் முடியாவிட்டால் மருத்துவ, தெரபி முறைகள் கைவசம் நிறையவே உள்ளன.

தற்போது ஆர்கசம் அடைவதில் ஏற்படும் சிக்கலுக்கு என்ன காரணம் என்பதை ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். கவனச் சித றல்தான் ஆர்கசத்தை அடைவ தில் சிக்கல் ஏற்பட முக்கியக் கா ரணம் என்கிறது இந்த ஆய்வு.
மேலும் செக்ஸ் உறவு குறித்த எதிர்மறைச் சிந்தனைகளைக் கொண்டிரு க்கும்போதும் சம்ப ந்தப்பட்ட பெண்களுக்கு ஆர்கசம் ஏற்படுவதில்லையாம்.
என்னத்தஎன்ற எண்ணத்துடன் செக்ஸ் உறவில் நுழைந்தால் நிச்சயம் ஆர்கசத்தை அடைவது சிரமம் என்கிறது இந்த ஆய்வு. இப்படிப்பட்ட எதிர்மறை சிந்தனைகள், கவனச் சிதறல்கள் ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். கவனச் சிதறல் இல் லாமல், மனம் ஒருமுகப்பட்டு, செ க்ஸ் உணர்வை அனுபவித்து, லயி த்து ஈடுபடும் பெண்களுக்கு ஆர்க சம் மிக எளிதாக ஏற்படுகிறதாம்.




நான்கு பெண்களில் ஒருவருக்கு மாதம் ஒருமுறையாவது ஆர்கசத் தை எட்டுவதில் சிரமம் ஏற்படுகிற தாம். செக்ஸில் நாட்டமின்மை பிரச்சி னைக்கு அடுத்து பெண்கள் அதி கம் சந்திக்கும் 2வது செக்ஸ் சம்பந்தப்பட்ட பிரச்சினை இந்த ஆர்கச த்தை அடைவதில் சந்திக்கும் சிக்கல் என் கிறார்கள் செக்ஸ் மருத்துவ நிபுணர்கள்.

இந்த ஆய்வுக்காக செக்ஸ் உறவில் தீவிரமாக ஈடுபட்டுள்ள 18 முதல் 59 வயது வரையிலான 191 பெண்களை உட்படுத்தினர். செக்ஸின்போது அவர் கள் ஆர்கசத்தை அடைந்தது குறித்து ம், அப்போது எந்த சிந்தனை யில் இருந்தனர் என்பது குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன.

செக்ஸ் மோசமான ஒன்று என்ற எண்ணம் கொண்டவர்களுக்கும், செக்ஸ் உறவின்போது ஆர்கசம் அவ்வளவு சீக்கிரம் வராதாம். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகையான செக்ஸ் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக