செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வுகளும் – மருத்துவ அலசல்



திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சி னைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிரு க்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப் பது கண்டறியப் பட்டுள்ளது.

திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக் ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைக ளும் அல சப்பட்டன. அதன்படி…. மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத் திற்குக் காரணம்….
குழந்தைப் பருவத்தில் பெரும்பாலானபெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் மோசமான செக்ஸ் அனுபவம் கிடைக்கிறது.

செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாத வயதில் அவர்கள் சந்திக்கும் இந்த அனுபவம், அவர்கள் வள ர்ந்து பெரியவர்களானதும் செக்ஸ் குறித்த தவறான எண்ணத்தை உரு வாக்கி விடுகிறது.

இதனால் பல பெண்களுக்குத் திரு மணத்திற்குப் பிறகும் செக்ஸ் அத்தனை ரசிப்பிற்குரியதாக இல்லைசாப்பிடுவது, தூங்குவது என்பது மாதிரி செக்ஸ் உறவும் ஏதோ மாமூலான ஒன்று என்கிற ரிதியில் செல்லும் போதும் பெண்களுக்கு அதன் மீதான ஆர்வம் குறைகிறது.


இன்னும் சில பெண்களுக்கு பிரசவம், களைப்பு, கோபம், மாத விலக் கு சுழற்சியில் ஏற்படும் கோளாறுகள், டென்ஷன் ஆகியவற்றின் காரணமாகக் கூட செக்ஸில் ஆர்வம் குறைகிறதாம்.

மனரிதியான பாதிப்புகளாக இருந்தால் செக்ஸ் தெரபி மற்றும் கவுன் சலிங் மூலமும், உடல் ரிதியான பாதிப்புகளுக்கு ஹர்மோன் ரிப் ளேஸ்மென்ட் தெரபி மூலமும் சிகிச்சை அளித்து இதைக் குணப் படுத்தலாம்.


பிறப்புறுப்பு வறட்சி:
இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு. ஈஸ்ட்ரோஜன் ஹர் மோன் அளவு குறையும் போது வறட்சி ஏற்படலாம். தாய்ப் பாலூட் டும் பெண்களுக்கும், மெனோபாஸ் காலக் கட்டத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது சகஜம். இதற்கும் ஹர் மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி பலனளிக்கும்.

குடிப் பழக்கம் இருக்கும் பெண்களுக்கும் பிறப்புறுப்பு வறட்சி ஏற்ப டுகிறது. ஆல்கஹலே அந்த வறட்சிக்குக் காரணம். குடி யை நிறுத்த வதன் மூலமும், வழுவழுப்புத் திரவங்களை உபயோகிப்ப தன் மூலமும் இதைக் குணப்படுத்தலாம்.


உறவின் போது வலி:
உறவின் போது சில பெண்க ளுக்குத் தாங்கவே முடியாத அளவுக்கு வலி ஏற்படலாம். பிறப்புறுப்புப் பாதையில் இரு புறங்களி லும் பட்டாணி அளவுக்குப் பெண்களு க்கு பார்த்தோலின் சுரப்பிகள் என்று உண்டு.
இவற்றின் வேலையே உறவின்போது வழுவழுப்புத் திரவத்தைக் கசியச் செய்வதுதான். இவை பாதிக்கப்படும் போது பிறப்புறு ப்பில் வீக்கம், எரிச்சல் ஏற்படு வதோடு சில சமயங்களில் நட க்கவே முடி யாத அளவுக்குக் கூட வலி தீவிரமாகலாம்.

மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இதை ஆன்டிபயா டிக் மருந்துகளின் மூலமோ, தேவைப்பட்டால் அறுவை சிகிச் சை மூலமோ சரிசெய்து விட முடியு ம்.

வலி ஏற்படுகிற சரியான இடத்தையும், சரியான நேரத்தையும் (உறவு தொடங்கிய உடனேயா, உறவின் இடையிலா, உச்சக் கட்டம் அடை கிற போதா) சொன்னால் மரு த்துவர்களுக்கு சிகிச்சை ளிக்க உதவியாக இருக்கும்.


உறவே கொள்ள முடியாத நிலை:
ஆர்வமும், ஆரோக்கியமும் இருந்தும் கூட சில பெண்க ளால் உறவில் ஈடுபட முடி யாத நிலை ஒன்று உண்டு. அதற்கு வாஜ னிஸ்மஸ் என் று பெயர். செக்ஸைப் பற்றிய பயம், கட ந்த காலக் கசப்பான செக்ஸ் அனுபவங்கள், பிரசவம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

மெனோபாஸை அடைந்து விட்ட பெண்களுக்கு பிறப்புறுப்புத் திசுக்க ள் சுருங்கியதன் விளைவாக கசிவு குறைவாக இருக்கும். இவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படலாம்.

செக்ஸ் தெரபியின் மூலம் இந்தப் பெண்களுக்கு இடுப்புச் சுவர் தசைகளை எப்படி லாக்ஸ் செய்வது என் று கற்றுக் கொடுக்கப்படும். மேலும் பெண் மேலிருந்த நிலையில் உறவு கொள்வதும் இதற்குத் தீர்வாக அமையும்.


உச்சக் கட்டத்தை அடைய முடியாமை:
 சில பெண்களுக்கு உறவின் ஏதேனும் ஒரு கட்டத்தில் உச்சக் கட்டம் சாத்தியமாகிறது. இன்னும் சிலருக்கு செக்ஸின் போது குறிப் பிட்ட சில நிலைகளைக் கையாளும் போது உச்சக் கட்டம் கிடைக்கிறது.
இன்னும் சிலர் சுய இன்பம் காண்பதன் மூல ம் மட்டுமே உச்சக் கட் டம் அடைகிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு உச்சக் கட்டம் என்பது எப்போதுமே சாத்தியமாவதில்லை.

உச்சக் கட்டம் அடைய முடியாத பெண்கள் செக்ஸை அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்றோ, அவர்கள் உடல ளவிலோ, மனதளவிலோ பாதிக்கப்பட்டவர்கள் என்றோ அர்த்தமில்லை.

உறவின் போது பெரும்பாலா பெண்களது கவனம் தன் கணவன் மீதே இருக்கிறது. கணவன் தேவைகளை முழு மையாக நிறைவேற்றுகிறோமா என்பதிலேயே அவர்கள் கவனம்போய் விடுவதால் தன் னை எது உச்சக்கட்டம் அடை யச் செய்யும் என்பதைப் பற்றி நினைக் கத் தவறி விடுகிறார்கள்.
இந்த மாதிரிப் பெண்கள் உறவு இல்லாத நேரங்களில் தன் உடலைத் தொட்டுப் பார்த்து அதில் எந்த இடம் அல்லது எந்த மாதிரி யான ஸ்பரிசம் தனக்குக் கிள ர்ச்சியைத் தருகிறது என்று கண்டறிய வேண்டும்.

அதைத் தன் கணவனிடம் சொல்லத் தயங்கக் கூடாது. எல்லாவற்று க்கும் மேலாக உறவின்போது அவசரம் இரு க்கக் கூடாது. உச்சக் கட் டம் அடையவும் பெண்கள் மேல் நிலையில் இருந்து உறவுகொள்வது பலனளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக