பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்ட
தைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த
காய்கறிகளில் இது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவைத் தாயக மாகக் கொண்ட காயும்
இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன.
இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான்
கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை
முதல் கால்வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப்பல!
கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி
பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக்
கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். சித்த
மருத்துவம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில்
பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும்.
பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல
விசயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு
மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும்
உதவுகிறது.
பாகற்காய் இயற்கையான மருந்துப்
பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூடியது.
பாகற்காய் குடல் புழுக்களை நீக்கிவிடும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே.
நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த
உணவு. இது மலச்சிக்கலைப் போக்கக் கூடியது. பாரம்பரிய மருத்துவத்தில் இது
காய்ச்சல், தீப்புண், தீரா இருமல், வலியுடன் கூடிய மாதவிடாய் ஆகியவற்றை
குணப்படுத்த அளிக்கப்பட்டது.
இதில் உள்ள கசப்புப் பகுதி தலையில் பொடுகு
வருவதைத் தடுப்பதால் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது கண் கோளாறுகளைக்
குணப்படுத்தவும் உதவுகிறது. அதற்கு இதில் உள்ள பீட்டா கரோட்டின் உதவி
புரிகிறது.
வாய்ப்புண்ணுக்கு இது மிகச் சிறந்த
மருந்தாகும். குருதியை சுத்திகரிக்கிறது. சரும நோய்களுக்கு மிகச் சிறந்த
நிவாரணி. தோல் வியாதிகளையும் குணப்படுத்தக் கூடியது.
எடை குறைக்க விரும்புவோர் இதைச்
சாப்பிடலாம். உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கும். இது மார்பு
புற்றுநோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக