நெல்லிக்காய் வைட்டமின் C, அதோடு
வைட்டமின் D, வைட்டமின் E நிறைந்தது. இதில் இரும்புச்சத்து
அதிகம் காணப்படுகிறது.
இதனை ஏதாவது
ஒரு வகையில்
அடிக்கடி உணவில்
சேர்த்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள்
பரிந்துரைக்கின்றனர். எனவே வெயில்
காலத்தில் நெல்லிக்காய்
ஊறுகாய் செய்து
சாப்பிடலாம். சத்தாகவும் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – அரை கிலோ
வரமிளகாய் : 30 கிராம்
உப்பு – ஒரு கை பிடி அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணய் – 150 மிலி
பெருங்காயத்தூள் – 1 டீ ஸ்பூன்
வெந்தையம் – 2 டீ ஸ்பூன்
கடுகு - 3 டீ ஸ்பூன்
ஊறுகாய் செய்முறை
நெல்லிக்காய் கொட்டைகளை நீக்கி
வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் கொதிக்கிற
வெந்நீரில் போட்டு பத்து நிமிடங்கள் மூடிவைத்து
நீரை வடிக்கவும்.
உப்பு, வர மிளகாயை
காயவைத்து பொடி
செய்து நெல்லிக்காயில்
சேர்த்துக் கலக்கவும்.
நல்லெண்ணையில் கடுகு, வெந்தையம்
பெருங்காயம் தாளித்துக் கொட்டி, நன்றாக கலந்து,
காற்றுப் புகாத
கண்ணாடி அல்லது
பீங்கான் பாத்திரத்தில்
எடுத்துவைக்கவும்.
கிலோ கணக்கில் நெல்லிக்காய்
ஊறுகாய் தயாரிக்கும்போது
நறுக்கிய காயின்
அளவு எட்டுக்கு
ஒன்று என்ற
அளவில் மிளகாய்த்
தூளும், உப்பும்,
காரத்தின் அளவுக்கு
முக்கால் பாகம்
அல்லது அதற்கு
மேலும்கூட எண்ணெயும்
தேவை. நெல்லிக்காயின்
புளிப்பைப் பொருத்து காரம், உப்பை கூட்டியோ
குறைத்தோ உபயோகிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக